திங்கட்கிழமை மாலை 5:28 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 200 ஆசிய யானைகளுக்குச் சமமான ராக்கெட்டினை விண்ணில் ஏவ இருக்கின்றது.
GSLV Mk-III என்ற பெயர் சூட்டியுள்ள இஸ்ரோ ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரக்கெட்டினை விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் மட்டும் முறையாக விண்ணிற்கு ஏவப்பட்டால் அமெரிக்காவிற்கு போட்டியாக இந்தியாவில் இருந்தும் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப முடியும். இது உண்மையிலேயே இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மையில்கல்.
இந்நிலையில் இந்த ஜிஎஸ்எல்வி எம்கே-III ராக்கெட் பற்றிய சில முக்கியமான தகவல்களை இங்குப் பார்ப்போம்.
விண்கலம்
இது இஸ்ரோ ஏவுதளத்தின் நேரடி காட்சிகள்.
GSLV Mk III D1 என்பது மூன்று-நிலை விண்கலம், இது உள்நாட்டு இயந்திரம் ஆகும், இது ஜியோசைஞ்ச்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (ஜி.டி.ஓ) இல் கனரகத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு எடுத்த செல்வதற்காகப் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிரோஜெனிக் என்ஜினுடன், நியமிக்கப்பட்ட C25, 28 டன் தூண்டுதல்களைக் கொண்டிருக்கிறது, இதில் இரண்டு திட ஸ்டாப்-மோட்டார்கள் (S200) மற்றும் ஒரு முக்கியத் திரவ ஊக்கமருந்து (L110) உள்ளது.
எடை
முழுமையாக நிரப்பப்பட்ட 5 போயிங் விமானத்திற்குச் சமமானதாக இந்த GSLV Mk III பார்க்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் 200 யானைகளுக்குச் சமமான எடை கொண்டுது இந்த விண்கலம் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு இயந்திரம்
2,300 கிலோ எடைக்கு அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணிற்கு ஏவ வேண்டும் என்றால் இந்தியா வெளிநாட்டு லாஞ்சர்களைத் தான் நம்பி வந்தது. ஆனால் இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு
GSLV Mk III D1 இயந்திரத்தைப் பொருத்தவரை 4,000 கிலோ எடைக்கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடியது ஆகும்.
இந்தியாவின் தகவல்தொடர்பு வளங்களை அதிகரிக்கும், இந்தியாவில் இருந்து முன்பு ஏவப்பட்ட ஜிசாட்-19 போன்று 6 முதல் 7 செயற்கைக்கோள்களுக்கு நிகரானது.
இந்தியர்கள் விண்வெளிக்குச் செல்ல வாய்ப்புள்ளதா?
இது இந்தியாவின் விண்வெளி வீரர்களான 'ககனேட்ஸ் அல்லது வைலோனட்ஸ்' என்ற பெயரில் அழைக்கப்படக்கூடிய மனிதர்களை விண்ணிற்கு ஏற்றிச் செல்லக்கூடிய எதிர்கால இந்தியாவின் ராக்கெட் ஆகும்.
மனிதர்கள் இந்த முறை செல்கிறார்களா?
முதன்முறையாக உறுவாக்க்பட்டுள்ள இந்த ராக்கெட்டில் மனிதர்கள் யாரும் செல்லவில்லை. அதற்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பத்தை இஸ்ரோ அனுப்பி இந்த ராக்கெட் சோதனையை நிகழ்த்துகின்றது.
லித்தியம்-அயன் பேட்டரிகள்
GSAT-19 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் மூலம் இயங்கும். பொதுவாக இந்தப் பேட்டரிகள் மிசாரக் கார் மற்றும் வாகனங்களில் தான் பெறும் அளவில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இதில் பயன்படுத்தும் பேட்டரி பல மடங்கு சக்திவாய்ந்தவை ஆகும்.
எதிர்காலப் பயணங்கள்
"மினியேஷிட்டர் வெப்ப குழாய், ஃபைபர் ஆப்டிக் ஜிரோ, மைக்ரோ எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) முடுக்க மானிட்டர்" உட்படச் சில மேம்பட்ட விண்கல தொழில்நுட்பங்களை GSAT-19 கொண்டுள்ளது. இவை அனைத்தும் முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலப் பயணங்கள் மீது முக்கிய அமைப்புகள் ஆக மாறி வருகின்றன.