இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தங்களது வெளிநாட்டுக் கிளை அலுவலகங்களில் 1,800க்கும் அதிகமான ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் அளிக்கின்றது.
அதில் 150 நபர்கள் சென்ற நிதி ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள், இதனால் இஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதி ஆண்டில் மிகப் பெரிய சவாலினை எதிர்கொள்ள இருக்கின்றது.
எதனால் சம்பளம் குறித்துப் பெரிதாகப் பேசப்படுகின்றது
இன்ஃபோசிஸ் நிறுவனம் அளிக்கும் சம்பளம் இப்போது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்க காரணம் சென்ற மாதம் அமெரிக்காவில் 10,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பதாகும்.
இந்திய ஊழியர்கள்
2016-2017 நிதி ஆண்டில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தனது இந்திய கிளைகளில் உள்ள 151,956 ஊழியர்களில் 50 நபர்களுக்கு மட்டுமே 1 கோடி ரூபாய்ச் சம்பளமாக அளித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள்
வெளிநாட்டு ஊழியர்கள் 48,400 நபர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1,800 நபர்களுக்குக் கோடிகளில் சம்பளம் வழங்கி வருகின்றது. வளர்ந்த சந்தையில் திறமையான தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயங்களில் சம்பளம் அளிக்கும் போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஃப்ரெஷர்களுக்கு அதிகச் சம்பளம்
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவில் பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஃப்ரெஷர்களை அதிக அளவில் எடுக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதுவும் இந்திய நிறுவனங்களுக்கு அதிகச் செலவினை தான் அளிக்கும்.
கல்லூரி படிப்பு முடிந்த உடன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது ஒரு வருடத்திற்கு 70,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் அளிக்க வேண்டும் என்றும் இதுவே நாட்கள் செல்லும் போது 125,000 முதல் 150,000 டாலர்கள் அதாவது 80 முதல் 96 லட்சம் ரூபாய் வரை அனுபவத்தைப் பொருத்துச் சம்பளம் உயரும்.
அனுபவம்
டலாஸ் உள்ளிட்ட சந்தைகளில் அனுபவம் உள்ள மென்பொருள் வல்லுநர்களுக்கு 125,000 டாலர்கள் முதல் 200,000 டாலர்கள் வரை சம்பளம் அளிக்க வேண்டி உள்ளது.
2017 நிதி ஆண்டில் வெளிநாடுகளில் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்
இந்தியாவில் அதிகம் சம்பளம் ஊழியர்களின் பட்டியலை இன்ஃபோசிஸ் வெளியிட்டாளும், வெளிநாட்டு ஊழியர்களின் பட்டியலை அதிகப்படியாகத் தவிர்க்கின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை இண்டெராக்டிவ் ஏஜென்சி பிரிவில் டிஜிட்டல் தலைவர் பொறுப்பில் உள்ள ஸ்கொட் சோர்கின் 7.3 கோடி சம்பளமாகப் பெறுகின்றார். இன்போசிஸ் நிறுவனங்களின் உலகளாவிய தலைவரான அப்துல் ரசாக் ரூ. 5.26 கோடி வழங்கப்படுகின்றது. வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியின் தலைவரான சஞ்சய் ராஜகோபாலன் ரூபாய் 5.2 கோடியைக் கடந்துள்ளார். ஆர்க்கிடெக்ட் மற்றும் தொழில்நுட்பம் பிரிவின் தலைவரான நவீன் புத்திராஜா 5.3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றார். பெருநிறுவன வளர்ச்சியின் உலகளாவிய தலைவர் ரூபிகா சூரி 5.1 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றார்.
யார் இவர்கள்?
ரஜாக், ராஜகோபாலன், புத்திராஜா மற்றும் சூரி ஆகியோ சேப் நிறுவனத்தில் இருந்து இன்ஃபோஸிஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளவர்கள், இதுமட்டும் இல்லாமல் மைக்ரோசாப்ட், சாம்சங்ம் பாங்க் ஆப் அமெரிக்கா, டிரீம்வொர்க்ஸ் மற்றும் ஐபிம் நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை 2 கோடி சம்பளம் அளித்து இன்ஃபோஸிஸ் இறக்குமதி செய்துள்ளது.
அதிகரிக்கும் செலவு
முழுமையாக மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்கான பணிகள் நடைபெறுவதால் திறமையானவர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள். எனவே சம்பளம் அதிகம் அளித்து ஊழியர்களை நிறுவனம் எடுக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டி
இந்திய நிறுவனங்கள் டிலோட்டி மற்றும் அக்சென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போட கண்டிப்பாக அதிகப்படியான சம்பளத்தை அளித்து உலகம் முழுவதிலும் இருந்து ஆட்களை எடுக்க முடிவு செய்துள்ளன.
விஷால் சிக்கா
இன்ஃபோஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை விஷால் சிக்கா தலைமை பெருப்பிற்கு வந்த பிறகு தான் இது போன்று அதிகச் சம்பளம் அளித்து ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் முடிவுகளை இன்ஃபோஸ் எடுத்துள்ளது என்றும் கூறலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications