கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்தது, கேரளாவில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
45 வயதான கீதா கோபிநாத் உலகளவில் மூன்றாம் பெண் பொருளாதார நிபுனர் ஆவார். அமர்த்தியா சென் அவர்களுக்குப் பிறகு முதல் இந்தியர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார் இவர்.
இடதுசாரி தலைவர்கள்
கீதா கோபிநாத் அவர்களை ஆளுங்கட்சி நியமித்து இருந்தாலும் பல இடதுசாரி தலைவர்கள் இவரை ஆதரத்துள்ளனர்.
கேரளா இவரை ஏன் தங்களது மாநிலத்தின் வணிக ஆலோசனைகளுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது தான் தற்போது அனைவரின் கேள்வி.
இப்படி இவருக்கு என்ன தகுதியும் திறமையும் இருக்கிறது..? வாங்க பார்போம்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்
கேரளா எனது சொந்த மாநிலம், எனது தாய், தந்தை இருவரும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், எனவே கேரளாவின் வளர்ச்சிக்காக எனது திறன்களையும் முயற்சிகளையும் பங்களிக்க அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு நான் தலை வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார் கீதா.
கீதா கோபிநாத் அவர்களின் தந்தை டிவி கோபிநாத் அவர்கள் கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அவரது தாயார் தமங்காடு நாம்பியார் குடும்பத்தாரைச் சேர்ந்தவர்.
கல்வி
கீதா கோபிநாத் தனது இளங்கலை பொருளாதாரப் படிப்பினை டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் முடித்துள்ளார், பின்னர் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூள் ஆப் எக்னாமிக்ஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார். ஆனாலும் தன்னை இந்திய கல்வி முறையில் படித்தவர் என்று தான் இவர் அடையாளம் காட்டிக்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் பெரிய நிதி மற்றும் நாணய நெருக்கடி
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இலங்கலை பட்டம் பெற்ற போது 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
அது தான் தன்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கணவர்
இவரது கணவர் மற்றும் முன்னால் வகுப்பு தோழரான இக்பால் தாலிவால் எம்ஐடியின் பொருளாதாரம் துறையில் ஜமேல் பாவர்ட்டி ஆக்ஷன் லேபில் கொள்கை இயக்குனராக உள்ளார். இவரது கணவரை விட கீதா கோபிநாத் அவர்களின் வேலை அதிக மன அழுத்தம் உடையது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இவரது பணி கடிகாரத்தைப் போன்று 24 மணி நேரத்திற்கும் உடையது ஆகும்.
சான்றுகள்
ஐவரி லீக் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்த நோபல் பரிசு பெற்ற அமர்யா சென் அடுத்து உலகளவில் மூன்றாவது பெண் மற்றும் முதல் இந்தியரான இவர் ஜான் ஸவான்ஸ்ட்ரா இண்டெர்னேஷனல் ஸ்டெடிஸ் மற்றும் ஹார்வர்டிலும் பொருளாதர துறையில் பேராசிரியர் ஆவார்.
நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பல
நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் கீதா ஒரு பார்வையாளர், அறிஞர் ஆவார்.
பொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்எ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார்.
ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவி கலத்தினை நீட்டிக்காததற்குத் தனது கட்டுரைகளில் இந்திய அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
விமர்சனம்
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி குறித்துப் பெருமை படும் என்னைப் போன்றவர்களுக்கு ரகுராம் ரஜனின் பதவி கலத்தை நீட்டிக்காதது மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்றும் கீதா கோபிநாத் கூறியிருந்தார்.
தமிழக அரசின் கீழ் இப்படி யாரவது உள்ளார்களா?
அப்படி யாரேனும் இருந்தால் கீழே கருத்தில் குறிப்பிடவும்.