சென்னை: பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்கள் ஐக்கிய அமைப்பின் கீழ் இருக்கும் 9 வங்கி யூனிகளில் இருக்கும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 22
பல வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி இயங்காது எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த முறை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாகத் திட்டமில்லை.
தனியார் வங்கிகள்
இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை பொதுத்துறை வங்கிகளின் சேவை முடங்க உள்ளது. இதேவேளையில் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய இயல்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
காசோலை பரிமாற்றம்
ஆனால் காசோலை பரிமாற்றத்தில் மட்டும் தாமதம் ஏற்படும் எனத் தனது வாடிக்கையாளர்களுக்கு முன் எச்சரிக்கை செய்துள்ளது தனியார் வங்கிகள்.
பேச்சுவார்த்தை
தலைமை தொழிலாளர் கமிஷனர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தால் போராட்டத்தை விட முடியாது என AIBOC அமைப்புப் பொதுச் செயலாளர் டி.டி பிரான்கோ தெரிவித்தார்.
கோரிக்கை
வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில், தற்போது போராட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி உறுதியாகியுள்ளது.
வராக்கடன்
இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.
பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதுவும் வங்கி அமைப்புகளின் முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர்
நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications