சென்னை: பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்கள் ஐக்கிய அமைப்பின் கீழ் இருக்கும் 9 வங்கி யூனிகளில் இருக்கும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 22
பல வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி இயங்காது எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த முறை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாகத் திட்டமில்லை.
தனியார் வங்கிகள்
இதனால் வருகிற செவ்வாய்க்கிழமை பொதுத்துறை வங்கிகளின் சேவை முடங்க உள்ளது. இதேவேளையில் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய இயல்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
காசோலை பரிமாற்றம்
ஆனால் காசோலை பரிமாற்றத்தில் மட்டும் தாமதம் ஏற்படும் எனத் தனது வாடிக்கையாளர்களுக்கு முன் எச்சரிக்கை செய்துள்ளது தனியார் வங்கிகள்.
பேச்சுவார்த்தை
தலைமை தொழிலாளர் கமிஷனர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தால் போராட்டத்தை விட முடியாது என AIBOC அமைப்புப் பொதுச் செயலாளர் டி.டி பிரான்கோ தெரிவித்தார்.
கோரிக்கை
வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில், தற்போது போராட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி உறுதியாகியுள்ளது.
வராக்கடன்
இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.
பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதுவும் வங்கி அமைப்புகளின் முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர்
நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications