இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகளின் அனுபவத்தினைக் கூட்டுவதற்காக மத்திய ரயில்வே விஸ்டாடோம் என்ற புதிய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விஸ்டாடோம் பெட்டிகளை மும்பை - கோவா வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்
மும்பை தாதர் ரயில் நிலையத்தில் இருந்து கோவாவின் மடகான் வரை செல்லும் ஜன் சாதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முழுமையாகக் கண்ணாடி கூரையுடன் விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அம்சங்கள்
விஸ்டாடோம் ரயில் பெட்டியில் சுற்றும் நாற்காலி, எல்சிடி திரை, கண்ணாடியால் செய்யப்பட்ட கூரை மற்றும் மிகப் பெரிய திரை கொண்ட ஜன்னல் கண்ணடிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
செலவு
40 நபர்கள் அமரக்கூடிய இந்த ரயில் பெட்டியை தயாரிக்கும் செலவு 3.38 கொடி ரூபாயாகும். 360 டிகிரியிலும் இந்தச் சீட்டுகளைத் திருப்ப முடியும் என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும்.
ரயிலின் பயண நாட்கள்
பருவமழை காலங்களில் இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களும், பருவமழை முடிந்த பிறகு வாரத்திற்கு 5 நாட்களும் இயக்கப்படுகின்றது.
பயண நேரம்
ஜன் சதாப்தி ரயிலில் தாதர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:25 மணிக்குப் புறப்பட்டுக் கோவாவின் மடகான் ரயில் நிலையத்தினை 4 மணிக்குச் சென்றடைகின்றது.
எங்குத் தயாரிக்கப்பட்டது?
விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இண்டக்ரல் கோச் பேக்ட்ரியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை
சதாப்தி ரயிலில் உணவு இல்லாமல் பயணிக்கும் எக்சிகியூட்டிவ் வகுப்புக் கட்டணம் தான் இந்தப் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் வசூலிக்கப்படுகின்றது. ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications