உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றது.
ஒரு பக்கம் தினமும் பெட்ரோல் விலையினை மாற்றி அமைக்கத் துவங்கியதில் இருந்த தான் இந்தப் பெட்ரோல் உயர்வு அதிகமாக இருக்கின்றது என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எண்ணெய் நிறுவனங்கள்
இப்படி அதிகமாக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்குவதில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
பிம் செயலி
மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் பிம் செயலி மூலமாகப் பெட்ரோல், டீசல் வாங்கும் போது கட்டணத்தினைச் செலுத்தினால் 41 பைசா முதல் 49 பைசா வரை குறைவாகப் பணம் செலுத்தினால் போதும்.
ஏடிஎம் வாடிக்கையாளர்கள்
இந்தக் கட்டண குறைப்புப் பிம் செயலி பயன்படுத்துபவர்கள் மட்டும் இல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திச் செலுத்தும் போதும் பெறலாம்.
எவ்வளவு விலை குறைப்பு?
பிம் செயலி அல்லது ஏடிஎம் கார்டுகள் மூலம் பெட்ரோல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 49 பைசாவும், டீசல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 41 பைசாவும் குறைவாக வசூலிக்கப்படும்.
அமெரிக்காவின் புயல்
அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் காரணமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி பதிப்பு ஏற்பட்டு விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
அதனால் மத்திய அரசு கலால் வரியைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி புதன்கிழமை அரசு பொதுநலச் செலவினங்களுக்காக வளர்ச்சி மற்றும் சமூகத் துறை திட்டங்களுக்கு நிதி தேவை என்று கூறினார்.
வரி
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் என இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வாட் செஸ் எனப் பெடோரிலய பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளன. அன்மையில் தமிழகத்தின் எடப்படி ஆரசு பெட்ரோல், டீசல் மீது வாட் வரியை உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி முதல் விலை குறையும்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் அவர்கள் வருகின்ற தீபாவளி முதல் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications