மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான செலவுகளையும் ஜப்பான் அரசே ஏற்கும்.
அனுமதி
ஜப்பான் மற்றும் இந்திய இடையிலான தொழில்நுட்ப பயிற்சிகள் நிகழ்வு குறித்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான அமைச்சர் தெரிவித்தார்.
ஒப்பந்தம்
இது குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மூன்று நாட்கள் பயணமாக இவர் அக்டோபர் 16ம் தேதி டோக்கியோ செல்லும் போது கையெழுத்திட இருக்கிறார்.
எத்தனை ஆண்டுகல் பயிற்சி
தொழில்நுட்ப பயிற்சிக்கான இத்திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்ல இருக்கும் இளைஞர்கள் மூன்று முதல் 5 ஆண்டுகள் வரை தங்கி இருந்து பயிற்சிகளைப் பெறுவார்கள்.
செலவுகள்
அடுத்த மூன்று வருடங்கள் இளைஞர்கள் பயிற்சிக்காக ஜப்பான் அனுப்பப்படுவார்கள் என்றும் இதற்கான நிதி உதவியை ஜப்பான் அரசு அளிக்கும் என்றும் தர்மேந்தரப் பிரதான் கூறியுள்ளார்.
பணியுடன் பயிற்சி
ஜப்பான் செல்லும் இளைஞர்கள் அங்கு உள்ள நிறுவனங்களில் பயிற்சியுடன் பணியிலும் ஈடுபடுவார்கள் என்றும் 50,000 நபர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா திரும்பும் இளைஞர்கள்
ஜப்பானில் இருந்து திரும்பி வரும் இளைஞர்கள் இந்திய நிறுவனங்களை வளர்ச்சி அடையை உதவுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.