தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் காரணங்களால் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பாதித்துள்ள நிலையில் தற்போது அரசுத் துறை வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட உள்ளன.
எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் வியாழக்கிழமை விரைவில் பணி நீக்கம் இருக்கும் என்று கூறியுள்ளார். அதுவும் நடப்பு நிதி ஆண்டில் நடக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இருக்கும் போது ஊழியர்கள் தேவையும் அதிகமாகத் தேவை, ஆனால் ஆடோமேஷன் மூலம் சேவையினை மெறுகுப்படுத்தும் போது தேவைப்படும் போது மட்டும் ஊழியர்களின் உதவியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆண்டு முழுவதும் ஊழியர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
முதலீடு
ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஐ வங்கி 4,000 கோடி வரை தொழில்நுட்பத்திற்காக முதலீடு செய்ய உள்ளது. இதில் ஏடிஎம் சேவைக்கான செலவுகள் ஏதுவும் இல்லை. அதே நேரம் எஸ்பிஐ மட்டும் ஊழியர்கள் எண்ணிக்கையினைக் குறைக்காமல் பிற வங்கிகளும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைத்து வருகிறன.
எச்டிஎப்சி
செப்டம்பர் 2016 முதல் செப்டம்பர் 2017 இடைப்பட்ட காலத்தில் மட்டும் எச்டிஎப்சி வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை 95,002-ல் இருந்து 86,543 ஆகக் குறைந்துள்ளது.
யெஸ் வங்கி
2017-ம் ஆண்டில் யெஸ் வங்கி 2,500 ஊழியர்கள் அதாவது 10 சதவீத ஊழியர்கள் எண்ணிக்கையினைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் செயல் திறன் குறைவாக உள்ள ஊழியர்களினை நீக்கிவிட்டு டிஜிட்டல் சேவையினை அறிமுகம் செய்ய யெஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
யோனோ செயலி
உங்களுக்கான ஒரு செயலி என்ற யோனோ செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி இன்று அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அருண் ஜேட்லி அவர்கள் வெளியிடுகிறார்.
இந்தச் செயலியினைப் பயன்படுத்தி எஸ்பிஐ பயனர்கள் எளிதாகப் பணப் பரிவர்த்தனை, கடன் சேவைகள் என்ற பல தரப்பட்ட எஸ்பிஐ வங்கியின் சேவைகளைப் பெற முடியும்.