பொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வரா கடன் அளவினை குறைப்பதற்காக நட்டம் அளிக்கும் வங்கி கிளைகளை மூடுமாறு நிதி அமைச்சகம் வங்கி நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டுக் கிளைகளும் இதில் பொருந்து என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு
மத்திய அரசு நட்டம் அளிக்கும் வங்கி கிளைகளைத் தொடர்ந்து நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூடுதல் செலவுகளை அதிகரிக்கும் என்றும் என்னுகிறது. எனவே இதுபோன்ற செலவுகளைக் குறைக்கவே நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை வங்கிகளுடன் இணைந்த உடன் பல வங்கி கிளைகளை முடி வருகிறது.
ஐஓபி
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியும் 59 பிராந்திய அலுவலகங்களை 10 ஆகக் குறைத்து ஊழியர்களுக்கு அதிக வேலை பழுவை கொடுத்து வருகிறது. இதனால் அதிகளவில் செலவுகளைக் குறைக்க ஐஓபி வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
நவம்பர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியானது 200 முதல் 300 நட்டம் அளிக்கும் வங்கி கிளைகளை மூடுவது அல்லது இடம் மாற்றுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது. முழு விவரம்.
வெளிநாட்டுக் கிளைகள்
நிதி அமைச்சகத்திடம் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஒரே நாட்டில் அதிக வங்கி கிளைகளை நடத்த விருப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே 5 முதல் 6 வங்கி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு வங்கி கிளை என்று குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.