இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் இன்போசில்-இல் பல்வேறு குழப்பங்களுக்குமத்தியில், இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) சலில் பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவில் இருந்து விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்திற்கு வந்த பின்னர், இந்நிறுவனத்தின் மிகப்பெரியநம்பிக்கையாக விளங்கியவர், இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி வைத்துத் தொடர்குற்றச்சாட்டுகள் மூலம் பதிவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சலில் பாரிக் இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகப் பணியைத் துவங்கியுள்ளார். இவரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
புதிய ஊழியன்
Ernst & Young நிறுவனத்தின் பார்ட்னராக இருந்து சலில் பாரிக், 2000ஆம் ஆண்டுக் கேப்ஜெமினி இதன் ஐடி சேவையைமுழுமையாகக் கைப்பற்றிய பின்பு சலில் கேப்ஜெமினி நிறுவனத்தின் புதிய ஊழியனாகப் பணியாற்ற துவங்கினார்.
இதன் பின் பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவில் கேப்ஜெமினி டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறது.
தற்போதையப் பதவி
சுமார் 17 வருடமாகக் கேப்ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சலில் பாரிக், தற்போது கேப்ஜெமினி நிர்வாகக்குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
கல்வி
சலில் பாரிக் ஐஐடி பாம்பே கல்லூரியில் ஏரோநாட்டிகள் இன்ஜினியரிங், கார்ன்வெல் பல்கலைகழகத்தில்மெக்கானிக்கள் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவரான நந்தன் நீலகேனியும் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சயின்ஸ்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது அதிகாரி
இன்போசில் நிறுவனம் சந்தையில் 36 வருடமாக இயங்கி வரும் நிலையில் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிறுவியவர்களேதலைமை நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி வந்தனர்.
வளர்ந்து வரும் புதிய டெக்னாஜி உலகில் இன்போசிஸ் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக நிறுவனர் குழுவைவிட்டுவிட்டு முதல் முறையாக வெளியில் இருந்து விஷால் சிக்காவை நியமித்தார்கள்.
தற்போது 2வது அதிகாரியாகச் சலில் பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
திறன்..
கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்தபோது சலில் பாரிக் ஊழியர்கள் எண்ணிக்கையும், விற்பனையையும் பலமடங்குஉயர்த்தினார். அதிலும் குறிப்பாக நிதியியல் மற்றும் களவுட் கம்பியூட்டிங் பரிவில் அமெரிக்க வாடிக்கையாளர்களை அதிகளவில் சேர்த்தார்.
புதிய சீஇஓ
அடுத்த 5 வருடத்திற்குச் சலில் பாரிக் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications