டெல்லி: மத்திய பட்ஜெட் 2018-2019 இன்னும் 13 நாட்களில் வர இருக்கும் நிலையில் நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்துள்ளார்.
பட்ஜெட் குறித்து மாநில அமைச்சர்களுடன் விவாதித்த விவரங்கள் அனைத்தும் வெளியாக நிலையில் தமிழகம் சார்பாகக் கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ் மற்றும் சில அமைச்சர்கள் வைத்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் என்னென்ன என்பது மட்டும் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் என்ன கேட்டார்
ரூ. 7,446 கோடி செலவில் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு திட்டம், தேசிய நெடுஞ்சாலைகளிலும், கோயம்பேடு-பூந்தமல்லி-வலாஜாஜபேட் சாலையின் ஆறு வழித்தடங்களிலும் வரும் பட்ஜெட்டில் சாலைப் பாதுகாப்புப் பணிக்காக 3,800 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அருண் ஜேட்லியிடம் தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரி மற்றும் பீகார் மாநில முதல்வர்கள், டெல்லி, குஜராத், மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு துணை துணை முதல்வர் மற்றும் 14 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மந்திரிகள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றும் தங்களது மாநில திட்டங்களுக்கான கோரிக்கையினை வைத்துள்ளனர்.
அருண் ஜேட்லி
மாநில அரசுகள் வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் அவர்கள் அளித்துள்ள ஆலோசனைகள் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் கூறினார்.
பட்ஜெட் 2018-2019
இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட் என்று அழைக்கப்படும் 2018-2019 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வர இருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications