தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்ததைப் போலவே மத்திய அரசு இந்திய மக்களுக்குச் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீட்டு அளிக்க உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பல கோடி குடும்பங்கள் மிகப்பெரிய அளவிலான நன்மையை அடையும். இதேபோன்ற திட்டம் தமிழ் நாட்டிலும் உள்ளது.
இந்தத் திட்டத்திலும் மத்திய அரசுக்கு முன்மாதிரியாக இருப்பது தமிழ்நாடு தான்.
10 கோடி மக்கள்
NATHEALTH அமைப்புக் கோரிக்கை கையில் எடுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் 10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிலான மருத்துவக் காப்பீடு அளிக்க உள்ளது.
புள்ளிவிவரம்
இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மீதமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்கின்றனர்.
தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் தனியார் நிறுவங்களுக்கு மிகப்பெரிய அளவிலான நன்மை காத்துக்கிடக்கிறது.
வேலைவாய்ப்பு
தற்போசு மத்திய அரசு அறிவித்துள்ள 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீட்டு மூலம் அரசு மற்றும் தனியார் துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
600கோடி ரூபாய்
டிபி நோயாளிகளுக்கான மருத்துவே சேவை மற்றும் மருந்துகளுக்குச் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சுகாதாரக் காப்பீடு
தற்போது வாழ்வியல் முறையில் மக்களுக்குச் சுகாதாரத் துறையின் அவசியம் மற்றும் காப்பீட்டின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் ஹெல்த் இன்சூர்ன்ஸ் வழங்க வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு இத்திட்டத்தைத் தற்போது அறிவித்துள்ளது.
மோடி அரசு
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் மோடி தலைமையிலான அரசு தற்போது 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் வெற்றியை மையமாக வைத்து 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ்-ஐ மையமாக வைத்து மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்சூரன்ஸ் திட்டங்கள்
மத்திய அரசு 2016ஆம் ஆண்டில் Pradhan Mantri Suraksha Bima Yojna பெயரில் நாட்டு மக்கள் அனைவருக்குமான விபத்து காப்பீடும், அதேபோல் ஆயுள் காப்பீடாக Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojna திட்டமும், பென்ஷன் திட்டமாக Atal Pension Yojana திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications