ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சர்களுக்குத் தலைவலியாக இருப்பது அரசு சமுக நலத் திட்டங்களுக்குச் செலவு செய்யப்படும் தொகையும், வரி வசூலில் செய்யப்படும் தொகைக்கும் மத்தியில் இருக்கும் நிதிப் பற்றாக்குறை அளவீட்டைக் குறைப்பது தான்.
ஆனால் சமீப காலமாக அரசுக்குப் புதிதாக ஒரு தலைவலி உருவாகியுள்ளது, வங்கிகளில் குவிந்து வரும் வராக் கடன் மற்றும் அதிகளவிலான கார்ப்ரேட் கடன்களைச் சமாளிக்கக் கூடுதலாக நிதியை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசும், நிதியமைச்சகமும் தடுமாறி வருகிறது.
11 வருடம்
இந்தத் தடுமாற்றத்தின் காரணமாகப் பிரணாப் முகர்ஜி, பி சிதம்பரம் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய நிதியமைச்சர்கள் கடந்த 11 வருடத்தில் சுமார் 2.6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்தியுள்ளனர்.
தொடர் உயர்வு
இந்த 11 வருடங்களில் வராக் கடன் மற்றும் அதிகளவிலான கார்ப்ரேட் கடன்களைச் சமாளிக்கத் தேவைப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறதே தவிரக் குறைந்ததாகத் தெரியவில்லை.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளின் வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு பல ஆயிர கோடிகள் நிதியை உட்செலுத்துகிறது.
ஊரக வளர்ச்சித் துறை
இப்படி வங்கிகளுக்குள் உட்செலுத்தப்பட்ட நிதியின் அளவு, ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி அளவை விடவும் 2 மடங்கு அதிகமானதாக உள்ளது.
அருண் ஜேட்லி
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டு நிதியாண்டுகளுக்கு மட்டும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
2010-11 முதல் 2016-17 வரையிலான காலத்தில் 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி மட்டுமே வங்கி அமைப்புகளில் மத்திய அரசு பணத்தைச் செலுத்தியுள்ளது.
லாபம் நஷ்டம்
எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே அரசு நிதியை உட்செலுத்தி வருகிறது. இந்த நிதி மூலம் பெற்ற லாபம் எவ்வளவு தெரியுமா..?
2010-11 : அரசின் நிதியுதவில் 18,617 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 44,901 கோடி ரூபாய்
2011-12 : அரசின் நிதியுதவில் 12,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 49,514 கோடி ரூபாய்
2012-13 : அரசின் நிதியுதவில் 12,517 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 50,582 கோடி ரூபாய்
2013-14 : அரசின் நிதியுதவில் 14,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 37,540 கோடி ரூபாய்
2014-15 : அரசின் நிதியுதவில் 6,990 கோடி ரூபாய், இந்த ஆண்டில் லாபம் 37,540 கோடி ரூபாய்
2015-16 : அரசின் நிதியுதவில் 25,000 கோடி ரூபாய், இந்த ஆண்டில் வங்கிகள் 17,993 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
2016-17 : அரசின் நிதியுதவில் 24,997 கோடி ரூபாய், இந்த ஆண்டில் வங்கிகள் 21,395 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
2017-18 : அரசின் நிதியுதவில் 80,000 கோடி ரூபாய்
2018-19 : அரசின் நிதியுதவில் 65,000 கோடி ரூபாய்
திவாலாகும் ஏர்செல்..
இண்டிகோ ஏர்லையன்ஸ்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications