உங்களுக்குச் சிறிய அளவில் பிஸ்னஸ் துவங்க திட்டமா..? அதற்கு இதுதான் சிறப்பான தருணம். ஏனென்றால் நீங்கள் செய்யும் பிஸ்னஸ்-க்கு மோடி அரசு சுமார் 4 லட்சம் ரூபாய் வரையிலான மானிய நிதி உதவியை அளிக்கிறது.
Coir Udyami Yojana கீழ் இந்தத் தொழிலுக்கு நிதி சலுகை கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். coir என்றால் தேங்காய் நார்..
கோயர் உத்யாமி யோஜ்னா என்றால் என்ன..?
1. மானிய சலுகை திட்டத்தின் கீழ் ஒரு தேங்காய் நார் ஆலையை அமைக்க 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதன் பின்பு இயக்க மூலதனம் (Working capital) தேவை. இது மொத்த திட்ட தொகையில் 25 சதவீதம் தேவைப்படும். ஆனால் இயக்க மூலதனம் மானியத் தொகையில் சேர்க்கப்படுவதில்லை.
2. இந்த மானிய திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் தொகையில் 40% தொகை இந்திய அரசாலும், 55 சதவீத தொகை வங்கிக் கடனாகவும், 5 சதவீதம் தொழில் செய்யும் நபர் முதலீடாகப் பண்ண வேண்டும்.
3. இத்திட்டத்தின் கீழ் மார்கெட்டிங் சேவைகளுக்காக அரசால் வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்..?
தனிநபர், நிறுவனங்கள், சுய தொழில் குழுக்கள், என்ஜிஓ, சோசைடி பதிவு சட்டம் 1860 கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தி கூட்டுறவு அமைப்புகள், இணைப்புக் குழுக்கள் மற்றும் அறநெறி அறக்கட்டளை ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் பெறுவது எப்படி..?
இதற்கான விண்ணப்பத்தைத் தேங்காய் நார் நிர்வாக அலுவலகத்தின் இணையதளமான www.coirboard.gov.inஇல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அல்லது தேங்காய் நார் நிர்வாக அலுவலகம் (Coir Board Offices), மற்றும் மாநில தொழிற்துறை அமைப்பில் இருந்து விண்ணப்பம் பெறலாம்.
எப்படி விண்ணப்பம் செய்வது?
இதற்கான விண்ணப்பத்தைத் தேங்காய் நார் நிர்வாக அலுவலகம் (Coir Board Offices), மாநில தொழிற்துறை அமைப்புகள், தேங்காய் நாட் அலுவலகங்கள், பஞ்சாய் அலுவலகங்கள் மற்றும் தேங்காய் நார் அலுவலகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நோடல் அலுவலகங்களில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் போதுமானது.
தேவையான ஆவணங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் மானிய சலுகையைப் பெற விண்ணப்பம் அளிக்கும் முன் விரைவாக முறையில் ஒப்புதல் பெற தேவையான ஆவணங்களைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
1. தொழிற்சாலை அமைக்க நீங்கள் திட்டமிடும் இடத்திற்கான பத்திரங்கள்
2. இத்துறையில் உங்களுக்கு இருக்கும் முன் அனுபவத்திற்கான ஆவணம்
3. இத்துறையில் நீங்கள் பயிற்சி பெற்றுள்ளதற்கான ஆவணம்.
4. தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரங்களை ஆர்டர் செய்துள்ளதற்கான ஆவணம் மற்றும் பில்.
5. தொழிற்சாலை துவங்க மாநில தொழிற்துறை அமைப்பு அளித்த ஒப்புதல் சான்றிதழ்
6. திட்டத்தின் மொத்த மதிப்பீடு குறித்துத் தணிக்கையாளர் கொடுத்த அறிக்கை.
7. மொத்த திட்டத்தின் ஆய்வறிக்கை
8. SC/ST பிரிவில் இருப்பவர்கள் ஜாதி சான்றிதழ்.
9. இதர தேவையான ஆவணங்கள்
மேலும் தவல்களுக்கு: http://coirboard.gov.in/?page_id=221
முகேஷ் அம்பானி..!
கடன்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications