டிஜிட்டல் பொருளாதாரத்தினை என்று மத்திய அரசு அறிமுகம் செய்ததோ அன்று முதல் வங்கிகள் பல விதமான கட்டண கொள்ளயில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் அவசரத்திற்கு ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்று பரிவர்த்தனை தோல்வி அடைந்தும் பணத்தினைப் பிடித்து இருப்பது கவலையை அளிக்கிறது.
அதுவும் இந்தக் கட்டணமானது வங்கிகளைப் பொருத்து மாறும், ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டி வரும்.
பரிவர்த்தனை தோல்வி
பணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டினை பிஓஎஸ் இயந்திரத்தில் ஸ்வைப் செய்யும் போது அல்லது ஏடிஎம் மையங்களில் பணத்தினை எடுக்கும் போது தேவையான அளவு பணம் இல்லாதது போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்குப் பரிவர்த்தனை தோல்வி அடையும் போது வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
எவ்வளவு கட்டணம்
எஸ்பிஐ வங்கி 17 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கும் அதே நேரம் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் 25 ரூபாய் + ஜிஎஸ்டி வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றன.
மெர்ச்சண்ட் டிஸ்கவுட் ரேட்
டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வேண்டும் என்றால் மெர்ச்சண்ட் டிஸ்கவுட் ரேட் கட்டணத்தினை வசூலிப்பது நல்லது அல்லது. ஆனால் மத்திய வங்கி 2,000 ரூபாய்க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்குக் மெர்ச்சண்ட் டிஸ்கவுட் ரேட் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டு இருந்தாலும் அது தேவையில்லாத ஒன்று கூறுகின்றனர்.
டிஜிட்டல் பொருளாதாரம்
வங்கிகள் தற்போது வசூலித்து வரும் கட்டணங்களானது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு எதிரானது என்று ஐஐடி மும்பையினைச் சேர்ந்த பேராசிரியர் அன்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு
இதுவே மாதத்திற்கு இரண்டு முறை ஏடிஎம் பரிவர்த்தனைகள் தவறாகக் கார்டினை பயன்படுத்தி நடைபெற்று அதற்கு வேண்டுமானால் அபராதமாகக் கட்டணத்தினை வசூலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications