இந்தியாவில் பிற விளையாட்டுகளை விடவும் அதிக ரசிகர்கள் கொண்டுள்ளது கிரிக்கெட் தான், சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரையில் வயது வித்தியாசம் இல்லாமல் டிவியில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் இந்தியாவில் ஏராளம். அதில் நீங்களும், நானும் கூட அடக்கம்.
இந்நிலையில் உலகிலேயே அதிக விலைக்கு ஒருவரின் கிரிக்கெட் பேட் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
விலையுர்ந்த கிரிக்கெட் பேட்
யாருடைதாக இருக்கும்..? ஏதேனும் யுகம் உள்ளதா..?
2011 உலகக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு வெற்றி கோப்பையைப் பெற்றுத் தந்த நம்ம தல டோனியின் பேட் தான் விலையுர்ந்த கிரிக்கெட் பேட் ஆகத் தற்போது கிரிக்கெட் உலகில் புதிதாக உருவெடுத்துள்ளது.
உலகக் கோப்பை
2-ஏப்ரல் 2011இல் நடந்த உலகக் கோப்பையில் டோனி அடித்த கடைசிச் சிஸ்க்ஸ் இன்னும் நம் கண்முன்னே இருக்கும் நிலையில், டோனி பினிஷிங் ஷாட் அடிந்த அந்தப் பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
ஏலம்
லண்டனில் 18 ஜூலை 2011இல் ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட் சேரிட்டி இரவு உணவு விருந்தில் டோனியின் இந்த வெற்றி பேட் சுமார் 1,00,000 பவுண்டுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 91.4 லட்சம் ரூபாய்க்கு ஆர்.கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டி நிறுவனம் பெற்றுள்ளது.
உலகச் சாதனை
இதுமட்டும் அல்லாமல் தற்போது டோனியில் இந்தக் கிரிக்கெட் பேட் தான் உலகின் விலையுர்ந்த பேட் என guinness world records அமைப்பு அறிவித்து டோனிக்கு புதிய மகுடத்தை அளித்துள்ளது.
இதுதான் சிறப்பான சம்பவம்.
கேப்டன் டோனி
இந்திய கிரிக்கெட் அணியில் மொத்த நம்பிக்கையும் ஆக இருந்த டோனி, புகழின் உச்சத்தில் இருக்கும்போதே கேப்டன் பதவியை விராட் கோலிக்கு விட்டுக் கொடுத்தார்.
ஆயினும் டோனியின் புகழ் ஒவ்வொரு நாளும் அதிகரித்துத் தான் வருகிறது.
ஐபிஎல்
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் நம்ம ஊர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் டோனி களமிறங்க உள்ளார். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ரசிர்களுக்குக் கின்னஸ் அறிவிப்புக் கொண்டாட்டமாக உள்ளது.
2011 உலக கோப்பை
டோனி அடித்த கடைசி சிக்ஸ்..
சிஎஸ்கேவில் நம்ம டோனி
ஈக்விடாஸ் நிறுவனம் வெளியிட்ட காலா ஸ்பெஷல் சிஎஸ்கே டீசர்.
வோல்டு கப் ஹைய்லைட்ஸ்
வோல்டு கப் ஹைய்லைட்ஸ்