கத்துவா பாலியல் பலாத்காரத்தை ஆதரித்து சர்ச்சை கருத்து, ஊழியர் பணிநீக்கம்: கோடாக் மகேந்திரா வங்கி
இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான கோடாக் மகேந்திரா வங்கியின் ஊழியர் ஒருவர் சமுக வலைத்தளத்தில் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஆதரித்துச் சர்ச்சை கருத்தைப் பதிவு செய்தால் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தியாவே இந்தப் பெண் குழந்தையின் பலாத்காரத்திற்கு எதிராகப் போரடி நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் கோடாக் மகேந்திரா வங்கியின் ஊழியர் சமுக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தானது மிகப் பெரிய வெறுப்பை மக்களிடம் தூண்டும் விதமாக இருந்துள்ளது.
சர்ச்சை கருத்து
கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு நந்த குமார், தற்போதைய முன்னால் கொடாக் மகேந்திரா வங்கி ஊழியர் பேஸ்புக்கில் " நல்ல வேலை அந்தப் பெண்ணை இந்த வயதிலேயே கொண்டு விட்டார்கள். இல்லை என்றால் வளர்ந்த பிறகு இவள் இந்தியாவிற்கு எதிராகத் தற்கொலை குண்டு ஏந்தி வந்து இருப்பார்' என்று பதிவிட்டுள்ளார்.
கண்டனம்
விஷ்ணுவின் பதிவுக்குப் பல தரப்பில் கண்டனம் வர பேஸ்புக்கில் வைரல் ஆகத் துவங்கியதும் கோடாக் மகேந்திரா வங்கி "விஷ்ணு நந்தகுமாரின் மோசமான செயல்திறனால் கோடாக் வங்கி பணியில் இருந்து 2018 ஏப்ரல் 11-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது". அது மட்டும் இல்லாமல் அவருடைய கருத்துக் கண்டனத்திற்கு உறியது என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடவடிக்கை
கோடாக் மகேந்திரா வங்கியின் பாலரிவட்டம் கிளையில், உதவி மேலாளராக இருந்த நந்தகுமார் சமுக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட சில மணி நேரங்களில் 1000-ம் கணக்கான மக்கள் இவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்குப் புகார் அளித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள்
சில வாடிக்கையாளர்கள் இந்தச் சர்ச்சை மிகுந்த உங்கள் ஊழியரின் கருத்தால் தங்களது வங்கி கணக்கை மூடிவிட்டுப் பணத்தினைத் திரும்பி அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமுக வலைத்தளப் பக்கம்
கோடாக் மகேந்திரா வங்கியின் சமுக வலைத்தளப் பக்கத்தில் 34,000 நபர்கள் விஷ்ணுவின் எதிராகக் கருத்துக்கள் பதிவு செய்து இருந்த நிலையில் அதில் பலரும் அவரைப் பணிநீக்கம் செய்யுமாறு, நீதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications