2015ஆம் ஆண்டு ஈரான் அனுமதி இல்லாமல் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பீரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்நாட்டின் மீது பொருளாதார மற்றும் வர்த்தகத் தடையை விதித்தது.
இந்தத் தடையை நீக்கும் வகையில் ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் சுமார் 2 வருடப் பேச்சுவார்த்தையில் Joint Comprehensive Plan of Action (JCPOA) என்னும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அமெரிக்கா வெளியேற்றம்
JCPOA ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆன பின்பு தற்போது இதில் விருப்பமில்லை, இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய கற்பனை எனக் கூறி அமெரிக்க இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
பதற்றம்..
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளைத் தனியாக விட்டு வெளியேறிய நிலையில் ஈரான் மூலம் வளைகுடா நாடுகளில் புதிதாகப் பிரச்சனை வெடிக்கும் என அச்சம் இப்பகுதியில் வெடித்துள்ளது.
அதிரடி முடிவு..
ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாமல் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தத் தடைகள் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலானதாக இருக்கும்.
ஈரான் அதிபர்..
இந்நிலையில் ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ருஹானி, இது உளவியல் போர், ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும், பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா வெளியேறியது தனக்கு மகிழ்ச்சி என்பதைச் சுசகமாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்கா தன் முடிவை மறுபரிசீலனை செய்து ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல்
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவைத் தான் முழுமையாக ஆதரிக்கிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிடான்யஹூ தெரிவித்துள்ளார். இந்த முடிவைத் தைரியமான தலைமை எனவும் பாராட்டியுள்ளார் பெஞ்சமின்.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications