பெங்களூரு: பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்ற 48 மாதங்களில் 41 வெளிநாட்டுப் பயணங்களில் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாகவும், இதற்காக 355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 165 நாட்கள் வெளிநாடுகளில் இவர் இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஆர்டிஐ ஆர்வலரான பீமப்பா கதாத் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவு குறித்துக் கேட்ட போது பிரதமர் அலுவலகம் இந்தப் பதிலினை அளித்துள்ளது.
அதிகமாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயணம்
பிரதமர் மோடி அவர்கள் 52 நாடுகளுக்கு 41 பயணங்கள் சென்றுள்ள நிலையில் அதிகபட்சமாகப் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏப்ரல் 9 முதல் 15 வரை 2015-ம் ஆண்டுச் சென்ற போது அதிகபட்சமாக 31,25,78,000 ரூபாய் செலவாகியுள்ளது.
குறைவாக செலவு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணம்
அதே நேரம் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் பூட்டானிற்குச் சென்று வந்த போது குறைந்தபட்சமாக 2,45,27,465 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு பயணங்கள்
மேலும் ஆர்டிஐ கேள்வியில் பிரதமர் மோடி அவர்கள் சென்ற உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்த கேள்விக்குப் பதிலைப் பிரதமர் அலுவலகம் அளிக்கவில்லை.
செலவை பற்றி தான் கேட்டேன், பாதுகாப்பு அம்சங்கள் அல்ல
பிரதமர் அலுவலகத்துடன் நான் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கேட்கவில்லை. எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று தான் கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்காததின் காரணங்கள் தெரியவில்லை என்று பீமப்பா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
பிரதமர் மோடி அவர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் ஒரு ஆர்வத்தில் தான் பிரதமர் அலுவலகத்திடம் இந்த ஆர்டிஐ கேள்வியைக் கேட்டதாகவும், அரசு மோடி அவர்களின் பயணத்தால் ஏற்பட்ட நன்மைகளையும் விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பாராளுமன்றம்
கடந்த 4 ஆண்டுகளில் 800 நாட்கள் பிரதமர் மோடி அவர்கள் அவரது கட்சிக்காக வாக்கு சேகரிக்கவும் பொது மக்களைச் சந்திக்கவும் நேரத்தினை செலவிட்டுள்ளதாகவும், 165 நாட்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும், 19 நாட்கள் மட்டும் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார் என்று அன்மையில் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications