இந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆவது என்பது ஒன்று புதிது இல்லை. ஆனால் அன்மையில் இந்தியன் ரயில்வேஸ் நிர்வாக நீண்டு தூரம் செல்லும் பல ரயில்களின் வேகத்தினைக் கூட்டியதால் உள்ளூர் செல்லும் பல் ரயில்கள் தாமதம் ஆகி பயணிகளுக்குச் சிரமத்தினை ஏற்படுத்தி வருகிறது.
ரயில்வே அமைச்சகமானது ரயில்களைத் தாமதம் இல்லாமல் இயக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இந்தச் சிக்கலும் கூடச் சேர்ந்துள்ளது.
ரயில் நேரங்கள் மாற்றக் கோரிக்கை
நீண்ட துர ரயில்களின் வேகத்தினை அதிகரித்ததால் பல உள்ளூர் ரயில்கள் தாமதமாகச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் ரயில்களின் நேரத்தினை மாற்ற ரயில்வே மண்டலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
தெற்கு ரயில்வே மண்டலம்
சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேஸ் 90 ரயிகளின் நேரத்தினை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மாற்றுவதற்கான பட்டியலினை தயாரி செய்து அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
வடக்கு ரயில்வே
வடக்கு ரயில்வே மண்டலமும் 95 ரயில்களின் நேரத்தினை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மாற்றி அமைப்பதற்கான பட்டியலினை தயார் செய்துள்ளது.
ரயில் தாமதம் ஆகப் பிற காரணங்கள்
கடந்த சில மாதங்களாக ரயில் பாதைகளைச் சீர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ரயில்வே போர்டு தலைவரான அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.
இலவச உணவு
ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பாதை சீர் அமைக்கும் பணிகளுக்காகத் தாமதமாகச் சென்றால் ஒரு வேளை உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவை இலவசமாக வழங்குவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications