மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் இருந்தால் நல்லது என்றும் தெரிவித்துள்ளது.
மோடியின் மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என அரசிதழில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து மத்திய அரசு இதனைத் தெரிவித்துள்ளது.
ஊடக செய்திகள்
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் ஆதாரை ஆவணமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
தேசிய மருத்துவக் காப்பீடு திட்டம்
ஆயுஷ்மான் பாரத் - தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் பயனாளிகளிடம் ஆதார் கார்டினை ஆவணமாகப் பெற வேண்டும் என்றும், இது அவர் தான் சரியான பயனாளியா என்பதற்காக என்றும் குறிப்பிட்டு இருப்பது மட்டும் இல்லாமல் அதே நேரம் கட்டாயமாகத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதார் இல்லை என்றால் என்ன ஆகும்?
ஆதார் எண் இல்லை என்பதற்காக மருத்துவக் காப்பீட்டிற்கான நன்மையை மறுக்கக் கூடாது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஜே பி நந்தா ஆதார் கார்டு இருந்தாலும், இல்லை என்றால் தகுதி உள்ள பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு நன்மையினை அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத்
ஆயுஷ்மான் பாரத் திட்டமானது 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டமாக 2018-2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்று வழி
ஆதார் கார்டுக்கு மாற்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றினைச் சமர்ப்பித்து மருத்துவக் காப்பீட்டிற்கான நன்மைகளைப் பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர விரும்புபவர்கள் ஆதார் இல்லை என்றால் பிற அரசு ஆவணங்களை எடுத்து வர வேண்டும் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications