பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன?

பெங்களூரு: பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்சால் வெளியேற்றப்பட்டார். தற்போது பிளிப்கார்ட்டின் மற்றொரு இணை நிறுவனரான பின்னி பன்சாலும் ராஜிநாமா செய்துள்ளார்.

வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட்டினை அன்மையில் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் முழுமையாக வால்மார்ட்டுடன் இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பின்னி பன்சால் ராஜிநாமா

பின்னி பன்சால் ராஜிநாமா

நேற்றைய தினம் (13.11.2018) பின்னி பன்சால் அவரது பிளிப்கார்ட்டின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜிநாமாவை அறிவித்தார். அவரது முடிவு உடனடியாக ஏற்றக்கொள்ளப்பட்டது. இணை நிறுவனரான பின்னி, பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் இருந்தே பணியாற்றி வருகிறார்.

பின்னி பன்சால் இந்தக் குற்றச்சாட்டுத் தன்மை பற்றி விவரங்களை அளிக்கவில்லை. ஆனால் அவர் இதைக் கடுமையாக மறுத்துவிட்டதாகவும் மற்றும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

அதிர்ச்சி அடையச் செய்தது

அதிர்ச்சி அடையச் செய்தது

இந்தக் குற்றச்சாட்டுகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது என்று பின்னி பன்சால் குறிப்பிட்டார். மேலும் அந்த விசாரணை மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பில் நம்பகத்தன்மை இல்லை. பிறகு நான் எப்படி அந்தச் சூழ்நிலைக்கு எதிர்வினை ஆற்றினேன் என்பதும் அவ்வளவு வெளிப்படைத்தன்மையாக இல்லை என்று பின்னி தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டிற்குப் பின்னியோ அவரது பிரதிநிதிகளோ பதில் அளிக்கவில்லை. பிளிப்கார்ட் தரப்பிலும் இதற்கு எந்தப் பதிலும் இல்லை.

 

வால்மார்ட்

வால்மார்ட்

இது குறித்து வால்மார்ட் தரப்பில் பின்னி மீது சுமத்த பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விசாரணையை முடித்துள்ளனர். அந்த விசாரணை அறிக்கையில் பின்னி எதிரான குட்டற்ச்சாட்டுகள் நிருபணம் செய்யப்படவில்லை. மேலும் வால்மார்ட் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கூறியுள்ளது.

குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை

குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை

இதைப் பற்றி அறிந்த ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுபக்கு பின்னிக்கு எதிராக வந்தது ஏறத்தாழ ஜூலை மாதத்தில். மேலும் அவர், விசாரணையில் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் பின்னி தரப்பிலும் வெளிப்படைத் தன்மையும் குறைவாகத்தான் இருந்தது.

வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியது. இதற்கு முக்கியமான காரணம், அமேசான் நிறுவனத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எதிர்கொள்ளத் தான்.

 

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

பின்னி ராஜிநாமாவை தொடர்ந்து கல்யாண் கிருஷ்ணமூர்த்திப் பிளிப்கார்ட்டின் தலைமை அதிகாரியாகத் தொடருவார் என வால்மார்ட் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மிந்த்ரா மற்றும் ஜாபாங் நிறுவனத்திற்கும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தித் தான் இறுதிக்கட்ட முடிவு எடுக்கும் பொறுப்பில் இருப்பார்.

புதிய சிந்தனை

புதிய சிந்தனை

வால்மார்ட், "பின்னி பிளிப்கார்ட்டின் மாற்றத்திற்காக ஒரு புதிய சிந்தனையை வடிவமைத்து வைத்திருந்தார்". இது நிறுவனத்தின் வெற்றிக்காக மிகவும் உதவியாக இருக்கும், அது இப்போது முழு வேகத்தில் செயல்பாட்டில் உள்ளது.

மிந்த்ரா மற்றும் ஜாபாங்

மிந்த்ரா மற்றும் ஜாபாங்

அனந்த் நாராயணன், மிந்த்ரா மற்றும் ஜாபாங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதே பொறுப்பில் தொடர்வார். ஆனால் அவர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி இடம் அணைத்து சூழ்நிலைகளுக்கும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+