டெல்லி: இந்தியன் ரயில்வேஸ் கேட்டரிங் & டூரிசம் கார்ப்ரேஷன் நிறுவனம் தங்களது தளத்தின் மூலம் புக் செய்த பயனரின் டிக்கெட்டினை சொல்லாமல் ரத்து செய்ததை அடுத்துத் தொடரப்பட்ட வழக்கில் ஐஆர்சிடிசி மீது 45,000 ரூபாய் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான மின்னஞ்சல்
ரோஹித் ஷர்மான என்ற மூன்றாம் நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் கோரிக்கையினை ஏற்றுச் சூஷ்வான் குப்தா ரே என்பவர் தனது குடும்பத்துடன் ரயில் பயணம் செய்ய இருந்த டிக்கெட்டினை ஐஆர்சிடிசி நிர்வாகம் ரத்துச் செய்து 3,450 ரூபாயினைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. அதுவும் ரயில் புறப்பட இருந்த அன்று காலை.
விமானப் பயணம்
இந்த எஸ்எம்எஸ்-ஐ கண்டு அதிர்ச்சி அடைந்த குப்தா உடனே ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தப் பயணத்தினை அவர் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 20,000 ரூபாய் செலவு செய்து விமானம் மூலம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
வழக்கு
இதனால் மன உலைச்சல் அடைந்த குப்தா ஐஆர்சிடிசி நிர்வாகம் மீது வழக்கு தொடர்நதை அடுத்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்து இந்த வழக்கில் இருந்து உன்மையில் புரிந்துகொண்டு 45,000 ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது.
அபராதம் குறித்த விவரம்
விமானத்திற்காக அவர் செலவு செய்த 20,000 ரூபாய், இழப்பீடு 15,000 ரூபாய் மற்றும் அவருக்குக் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மன உலைச்சலுக்காக 10,000 ரூபாய் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications