ஆர்பிஐ, சிபிஐ என அனைத்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை காலி செய்து அரசு சொல்வதைக் கேட்கும் கிளிப் பிள்ளைகளாக மாற்ற முயன்றது மோடியின் மத்திய அரசு. அதில் ஆர்பிஐ தான் நம்பர் 1. காரணம் அந்த 3.6 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் பணம்.
ரிசர்வ்
இந்திய மத்திய வங்கியான ஆர்பிஐ-யிடம் தனக்குத் பல்வேறு ரிசர்வ்களாக சுமார் 3.6 லட்சம் கோடி ரூபாய் இருப்பது உண்மை தான். அதை குறி வைத்து தான் மத்திய அரசு ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தே காய் நகர்த்தியது, உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது எல்லாம்.
ரிசர் என்றால் என்ன..?
ஆர்பிஐ-க்கு ஒரு ஆண்டில் வரும் லாபத்தை, முதலில் அவசரத் தேவைக்கான ரிசர்வ்வாக ஒதுக்கி வைக்கும். அந்த தொகையை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆர்பிஐ சட்ட திட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அந்த ரிசர்வ் நிதியில் இருந்து பயன்படுத்தலாம். மற்ற எந்த காரியத்துக்கு அந்தப் பணத்தை பயன்படுத்த முடியாது. அந்த ஆர்பிஐ ரிசர்வ் தொகையைத் தான் மத்திய அரசு தானமாக கேட்கிறது.
ஒரு அறிக்கை
தற்போது மத்திய அரசு காசு கேட்டு ஆர்பிஐ-யை நச்சரிப்பது தவறு என அமர்த்தியா லஹிரி என்பவர் தலைமையில் செய்யப்பட்ட ஆய்வு சொல்கிறது. மேற் கொண்டு அரசு வற்புறுத்தி வாங்கினால் நாளை ஆர்பிஐ-யில் ஒரு பணப் பிரச்னைக்கு காசு இல்லாமல் போய்விடும். மீண்டும் ஆர்பிஐ அரசிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் வரும் இதனால் ஆர்பிஐ-ன் தன்னாட்சிக்கு பங்கம் ஏற்படும் என விளக்கி இருக்கிறார்.
45 நாடுகள்
சர்வதேச அளவில் 45 நாடுகளின் மத்திய வங்கிகளை ஆய்வு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எனப் பிரித்தும் இந்தியாவின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்கள்.
Capital to Asset Ratio
அதில் முக்கியமாக Capital to Asset Ratio (கையில் இருக்கும் முதலுக்கும், சொத்துக்களுக்குமான ஒப்பீடு) இந்தியாவுக்கு கொஞ்சம் பற்றாக் குறையாகத் தான் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள். 45 நாடுகளுக்கும் சராசரியாக 6.56% Capital to Asset Ratio இருக்கிறது. வளரும் நாடுகளில் இந்த Capital to Asset Ratio 6.96 சதவிகிதமாக இருக்கிறது. வலர்ந்த நாடுகளில் Capital to Asset Ratio 5.67 சதவிகிதமாகைருக்கிறது.
இந்தியாவின் ஆர்பிஐ
இந்தியாவின் Capital to Asset Ratio 6.6 சதவிகிதமாக இருக்கிறது. 45 நாடுகளோடு ஒப்பிடும் போது போதுமானதாகவும், வளரும் நாடுகளோடு ஒப்பிடும் போது 0.36 சதவிகிதம் குறைவாகவும் இருக்கிறதாம். எனவே ஆர்பிஐ இடமிருந்து காசு வாங்க வேண்டாம் என வலியுறுத்தி இருக்கிறார் அமர்த்தியா லஹிரி.
அரசே பலவீனமாக இருந்தால்
ஆர்பிஐ சட்டப்படி தன்னாட்சி என்றாலும் அதற்கு ஒரு பிரச்னை என்றால் அரசு தான் கை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசுக்கே நிதிப் பற்றாக்குறையில் தான் பட்ஜெட் போடுகிறார்கள். எனவே அரசால் ஆர்பிஐ-க்கு பணம் கொடுத்து உதவ முடியாது. ஆகையால் தான் ஆர்பியின் தன்னாட்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டி இருக்கிறது என்கிறார் லஹிரி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications