சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸப் தன் பிசினஸை அமெரிக்காவில் தொடங்கியது. இன்று உலகில் மொத்தம் 130 கோடி பேரால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அப்ளிகேஷனாக உருவெடுத்திருக்கிறது.
வளைத்துப் போட்ட ஃபேஸ்புக்
2009-ம் ஆண்டு தொடங்கி வெறும் ஐந்தே ஆண்டுகளில் அசாத்திய வளர்ச்சிக் காட்டுவதைப் பார்த்த சக அப்ளிகேஷன்களில் ஒன்றான ஃபேஸ்புக் கைகளைக் குலுக்கி டீல் பேசியது. ஒருவழியாகப் பேசி பிப்ரவரி 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அன்றில் இருந்து வாட்ஸப் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பல்வேறு விஷயங்களுக்கு வாட்ஸப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய வணிகர்கள்
இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 50 லட்சம் பேர் வாட்ஸப்பை தங்கள் பிசினஸுக்குப் பயன்படுத்துகிறார்களாம். வாட்ஸப்பை பயன்படுத்தும் சிறு குறு தொழில் முனைவோர்களில் 84 சதவிகிதம் பேர் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வாட்ஸப் பெரிய அளவில் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல் 80 சதவிகித சிறு குறு பிசினஸ் செய்பவர்கள், வாட்ஸப் தனியாக தங்கள் பிசினஸை வளர்க்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள். இத அறிந்த வாட்ஸப் இப்போது இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு புதிய போட்டியை அறிவித்திருக்கிறது.
ஜெயிச்சா என்ன தருவீங்க
இந்தியாவின் இருக்கும் இளைய தலைமுறை பிசினஸ் மேன்களை உற்சாகப்படுத்த "Startup India-WhatsApp Grand Challenge" என்றொரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இந்த போட்டியில் வெல்லும் டாப் ஐந்து பேருக்கு பரிசாக சுமார் 1,75,00,000 ரூபாய் கொடுக்கப்படுமாம். வரும் மார்ச் 10, 2019-க்குள் இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமாம்.
எதைக் காட்ட வேண்டும்
நல்ல பிசினஸ் ஐடியா, அதை சரியாக செயல்படுத்தும் ஒரு பிசினஸ் மாடல், பெரிய அளவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது, அன்றாட பிரச்னைகளுக்கு விடை சொல்லும் பிசினஸ் தீர்வுகளை வைத்திருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பிறகு என்ன இது உங்களுக்கான வாய்ப்பாக இருந்தால் விண்ணப்பித்துத் தான் பாருங்களேன்..? வெற்றி பெற வாழ்த்துக்கள்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications