சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸப் தன் பிசினஸை அமெரிக்காவில் தொடங்கியது. இன்று உலகில் மொத்தம் 130 கோடி பேரால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய அப்ளிகேஷனாக உருவெடுத்திருக்கிறது.
வளைத்துப் போட்ட ஃபேஸ்புக்
2009-ம் ஆண்டு தொடங்கி வெறும் ஐந்தே ஆண்டுகளில் அசாத்திய வளர்ச்சிக் காட்டுவதைப் பார்த்த சக அப்ளிகேஷன்களில் ஒன்றான ஃபேஸ்புக் கைகளைக் குலுக்கி டீல் பேசியது. ஒருவழியாகப் பேசி பிப்ரவரி 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. அன்றில் இருந்து வாட்ஸப் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று பல்வேறு விஷயங்களுக்கு வாட்ஸப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய வணிகர்கள்
இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 50 லட்சம் பேர் வாட்ஸப்பை தங்கள் பிசினஸுக்குப் பயன்படுத்துகிறார்களாம். வாட்ஸப்பை பயன்படுத்தும் சிறு குறு தொழில் முனைவோர்களில் 84 சதவிகிதம் பேர் வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வாட்ஸப் பெரிய அளவில் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல் 80 சதவிகித சிறு குறு பிசினஸ் செய்பவர்கள், வாட்ஸப் தனியாக தங்கள் பிசினஸை வளர்க்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள். இத அறிந்த வாட்ஸப் இப்போது இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு புதிய போட்டியை அறிவித்திருக்கிறது.
ஜெயிச்சா என்ன தருவீங்க
இந்தியாவின் இருக்கும் இளைய தலைமுறை பிசினஸ் மேன்களை உற்சாகப்படுத்த "Startup India-WhatsApp Grand Challenge" என்றொரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இந்த போட்டியில் வெல்லும் டாப் ஐந்து பேருக்கு பரிசாக சுமார் 1,75,00,000 ரூபாய் கொடுக்கப்படுமாம். வரும் மார்ச் 10, 2019-க்குள் இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமாம்.
எதைக் காட்ட வேண்டும்
நல்ல பிசினஸ் ஐடியா, அதை சரியாக செயல்படுத்தும் ஒரு பிசினஸ் மாடல், பெரிய அளவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது, அன்றாட பிரச்னைகளுக்கு விடை சொல்லும் பிசினஸ் தீர்வுகளை வைத்திருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பிறகு என்ன இது உங்களுக்கான வாய்ப்பாக இருந்தால் விண்ணப்பித்துத் தான் பாருங்களேன்..? வெற்றி பெற வாழ்த்துக்கள்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications