Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
டெல்லி: 10 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை 4 சதவீதமாக குறைத்தது பெரும் சாதனை என்று மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று லோக்சபாவில் பெருமிதத்துடன் அறிவித்தார்.
பட்ஜெட் 2019 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டான இதில் பல முக்கிய அறிவிப்புகளை பியூஷ் கோயல் அறிவித்ததோடு, இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த சாதனைகளையும், அமல்படுத்திய திட்டங்களையும் விரிவாக விளக்கிப் பேசினார்.
அவரது பேச்சில் முக்கியமாக தெரிவிக்கப்பட்ட 5 அம்சங்கள் இவைதான்
- பணவீக்க விகிதத்தை கடந்த 5 ஆண்டுகளில் 10 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக மோடி தலைமையிலான அரசு குறைத்து விட்டது.
- இந்தியாவின் நடப்பு நிதிப் பற்றாக்குறையானது 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது சாதனையாகும்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் கவர்ந்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.
- இரட்டை இலக்க பணவீக்கத்தை ஒற்றை இலக்கமாக கொண்டு வந்து மிகப் பெரிய விஷயம்.
- 2002ல் புதிய இந்தியாவை நாம் நிச்சயம் காண்போம்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary