டெல்லி: நாட்டில் இதற்கு முன்னதாக 14 முறை இடைக்கால பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வரக்கூடிய லோக்சபா தேர்தலை போன்று முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த பட்ஜெட் பேச்சுகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 2019ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2019ம் ஆண்டுக்கு முன்னதாக, நமது நாட்டில் 14 முறை இடைக்கால பட்ஜெட்டுகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட் என்பது 2 சூழ்நிலைகளை முன் வைத்து தாக்கல் செய்யப்படும். முதலாவதாக, முழு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு அரசாங்கத்திடம் நேரம் இல்லாத போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இரண்டாவது, எந்த ஆண்டில் லோக்சபா தேர்தல் வர உள்ளதோ, அதே ஆண்டில் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த காலங்களில் எப்போது எல்லாம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது என்பதை பார்க்கலாம்.
1947ல் முதல் பட்ஜெட்
நாட்டின் முதல் இடைக்கால பட்ஜெட்டானது 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இந்த வரவு செலவுத் திட்ட காலம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மார்ச் 31, 1948ம் ஆண்டு வரை இருந்தது.
2வது பட்ஜெட்
இரண்டாவது இடைக்கால பட்ஜெட் சி.சி. தேஷ்முக் அவர்களால் 1952-53ல் லோக்சபா தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது இடைக்கால பட்ஜெட்டானது, 1957-58ல் பொதுத்தேர்தல்களுக்கு முன்பாக டி. டி. கிருஷ்ணமாச்சாரி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பிரதமராக இருந்தவர் நேரு
மொரார்ஜி தேசாய் 1962-63 ல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்பொழுது ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவியில் இருந்தார். அதற்கு அடுத்து, 1967-68ல் இரண்டாவது முறையாக இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்தார். அப்பொழுது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவரின் இரண்டு இடைக்கால பட்ஜெட்களும் மிக முக்கியமானதாக இன்று வரை பார்க்கப்படுகிறது.
திட்டங்கள் இல்லை
1971-72ல், இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை ஒய்.பி சவூனால் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பெரிதாக அறிவிப்புகள், கவர்ச்சிக்கரமான திட்டங்கள் இல்லை.
வரலாற்றில் இடம்
1977ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. இதை நிதியமைச்சர் ஹரிபாய் எம்.பட்டேல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் வரலாற்றின் மிகச்சிறிய உரை கொண்டதாகும்.
அரசியல் உரை என விமர்சனம்
1980-81ல் ஆர்.வெங்கட்ராமன் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். அவர் தமது பட்ஜெட் உரையை ஒரு அரசியல் உரையை போன்று வாசித்தார் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்து, பரவலாக பேசப்பட்டது.
சந்திரசேகர் அரசு
1990ல் பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென சந்திரசேகர் அரசாங்கம் கவிழ்ந்ததால், அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1991ம் ஆண்டிற்க்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, யஷ்வந்த் சின்ஹா இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
மன்மோகன் பட்ஜெட்
லோக்சபா தேர்தல் உடனடியாக வர இருந்ததால், 1991-92ல் டாக்டர் மன்மோகன் சிங் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். வாஜ்பாய் அரசில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1998-99ல் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
வாஜ்பாய் அரசாங்கம்
வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று, தேர்தல் வர இருந்தது. அதனால் 2004-05ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்
2008-09 ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அந்த வரவு செலவு திட்டத்தில் எந்த பெரிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதுவும் லோக்சபா தேர்தலை முன்வைத்தே தாக்கல் செய்யப்பட்டது.
கடைசியாக பட்ஜெட்
கடைசியாக இடைக்கால பட்ஜெட் லோக்சபா தேர்தல் காரணமாக 2014ம் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications