டெல்லி: விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
16வது லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டை இன்று நிதித்துறை கூடுதல் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தது போலவே விவசாயிகளின் மனங்களை குளிர்விக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதிஅமைச்சர் பியூஷ் கோயல்.
22 விவசாய பொருட்களின் விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்
விவசாயிகளுக்கு வருமான ஆதரவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும். இதன்மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெரும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான இந்த திட்டம் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று கூறும் போதே பாஜக உறுப்பினர்கள் ஜெய் கிஷான் என்று கூறி முழக்கமிட்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் மனங்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மானியமாக கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் வங்கிக்கணக்கில் பணமாக வரவு வைக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்தனர். இதே கருத்தினை கடந்த 2016-17 பொருளாதார ஆய்வறிக்கையில் முன்னாள் நிதி ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கேரளாவில் நடந்த பேரணியில் பேசிய போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு ஏழைக்குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதே திட்டத்தை சற்று மாற்றி விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் பியூஷ் கோயல்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications