டெல்லி: ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பியூஷ் கோயல் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி 6.50 லட்சம் வரை வருமான செலுத்த தேவையில்லை என்பது போல பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதுநாள் வரை தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருக்கும்போது வரி ஏதும் செலுத்த தேவையில்லை. இதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்கும்போது 20 சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே 10 லட்ச ரூபாய்க்கும் கூடுதலாக ஆண்டு வருமானம் இருக்கும்போது அதில் 30 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இருக்கும்போது 25 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும் என்று வணிகர்களும், தொழில் துறையினரும் மாத சம்பளம் வாங்குபவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் மாத சந்தாதாரர்களுக்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பால் வார்த்தார். அவரது அறிவிப்பின் படி தனிநபர் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு
நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு. வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இரண்டு வீட்டுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும். மாத வாடகை மூலம் வரும் வரிக்கான விலக்கு 1.80 லட்சத்தில் இருந்து 2.40 லட்சமாக உயர்வு. 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை. ஒட்டுமொத்த வருமான வரிசலுகையால் 6.50 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.
மத்திய அரசின் வருவாயில் 70 சதவிகிதம் வரையிலும் தனி நபர் வரி செலுத்துவதில் இருந்துதான் கிடைக்கிறது. அதனை நாங்கள் இழக்க விரும்பவில்லை. எனவே தான் தனிநபர் வருமான வரி விலக்கு சதவிகிதத்தில் நாங்கள் கை வைக்கவில்லை. இருந்தாலும் வரும் நிதி ஆண்டில் இது குறித்து நாங்கள் திடமான முடிவெடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய, நடுத்தர வர்க்கத்தினரையும், மாத சம்பளதாரர்களையும் குறி வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 18,600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு இருந்தாலும் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்பதால் இதனை விட்டுக்கொடுப்பதாகவும் பியூஷ்கோயல் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications