செப்டம்பர் 2016-க்குப் பிறகு ஜியோ தலைவிரித்து ஆடத் தொடங்கியது. நேத்து வந்த பய என்னயா பண்ணப் போறான் என அதிகம் கண்டு கொள்ளாத ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இப்போது ஜியோ வால் எல்லாமே போச்சு என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் சுனில் மித்தல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஜியோவால் தான் எங்களுக்கும் டேட்டா மற்றும் கால் கட்டணங்களைக் குறைக்க வேண்டி இருந்தது. அதனால் எங்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது என வெளிப்படையாகச் சொனார்.
அதைனைத் தொடர்ந்து இப்போது வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தி தலைவர் குமாரமங்களம் பிர்லாவும் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.
சுமை நிதிச் சுமை
மார்ச் 2019-ல் இந்திய டெலிகாம் துறைக்கு இந்தியாவில் செயல்படும் டெலிகாம் நிறுவனங்கள் அலைக்கற்றைகளைத் தொடர்ந்து பயனப்டுத்திக் கொள்ள சில தவனைக் கட்டணங்களையும், மேலும் சில சேவைகளுக்கான கட்டணங்களையுன் செலுத்த வேண்டி இருக்கிறது. வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அப்படி வரும் மார்ச் 2019-ல் 6,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது.
பேச்சு வார்த்தை
இந்த கட்டணங்களை ரத்து செய்யச் சொல்லி இண்திய டெலிகாம் துறையின் செயலர் அருணா சுந்தரராஜனைச் சந்தித்து பேசி இருக்கிறார். அதோடு ஜியோ இந்திய டெலிகாம் சந்தையோடு இணையாத ரீதியிலேயே செயல்பட்டு வருகிறது. அவர்கள் செய்த அதிரடி நடவடிக்கைகளால் தான் இன்று நாங்கள் உங்களிடம் எங்கள் தவணைகளை ரத்து செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் சொன்னாராம்.
கடிதம்
Cellular Operators Association of India (COAI) என்கிற இந்தியாவின் டெலிகாம் அமைப்பும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனொஜ் சின்ஹாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் "ஜிஎஸ்டி மூலம் தங்களுக்கு திரும்ப வர வேண்டிய 35,000 கோடி ரூபாய் பாக்கியை, டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களாக எடுத்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நிதிச் சுமை
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் 4,973 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தைக் காட்டியது. அதே போல இந்த டிசம்பர் காலாண்டிலும் சுமார் 4500 கோடி நஷ்டம் கணக்கு காட்ட இருக்கிறது. இப்படித் தான் மொத்த இந்திய டெலிகாம் துறையும் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியாவின் டெலிகாம் சேவை நிறுவனங்களைக் காப்பாற்ற எதையாவது பார்த்து செய்யச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது ஏர்டெல் மற்றும் வொடாஃபோன் ஐடியா.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications