விதிகளை மதிக்காத ஆக்ஸிஸ், யூகோ, சிண்டிகேட் வங்கிகளுக்கு தலா 2 கோடி அபராதம்.! கண்டிக்கும் ஆர்பிஐ

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டும் அதன் கீழ் உள்ள வங்கிகளுக்கு எதார்த்தமாக அதிரடி விச்ட் அடிக்கும்.

அப்போது வங்கிகள் ஆர்பிஐ சொல்லி இருக்கும் விதிகள் படி நடந்து கொள்கிறதா, கணக்கு வழக்குகளிஅ முறையாக முடிக்கிறார்களா..? என ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து கண்டிக்கும். அவ்வப் போது அபராதங்களும் விதிக்கும்.

கடந்த சில மாதங்களிலும் அது போன்ற வழக்கமான சரிபார்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. அதில் விதிகளை மீறி இருந்த வங்கிகளுக்கு அபராதமும், ஒழுங்காக விதிகளைக் கடை பிடிக்க வேண்டிய அவசியங்களையும் எடுத்துச் சொல்லி இருக்கிறது.

Cheque

Cheque

காசோலை தொடர்பாக ஆர்பிஐ சொல்லி இருக்கும் விதிகளை மதிக்காததற்கு தான் ஆக்ஸிஸ் வங்கி, மற்றும் யூகோ வங்கிக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

Duplicate notes

Duplicate notes

அதோடு கள்ள நோட்டுக்களை சரியாக கண்டு பிடிக்க ஆர்பிஐ சொல்லி இருக்கும் வழி முறைகளை சரியாக மேற்கொள்ளாததற்கு ஆக்ஸிஸ் வங்கிக்கு மட்டும் 20 லட்சம் ரூபாய் கூடுதலாக அபராதம் விதித்திருக்கிறது.

Frauds

Frauds

மோசடி மற்றும் ரிஸ்க் நிர்வாகத்தில் ஆர்பிஐ-ன் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததற்கு சிண்டிகேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ரிசர் வங்கி.

Pressure for customer

Pressure for customer

காசோலைகள் மூலம் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்க வேண்டிய காசோலைகளை வாங்கியதைக் கூட ஒரு குற்றமாகப் பார்க்கிறது ஆர்பிஐ. சுருக்கமாக Account Payee காசோலைகளை வங்கி அதிகாரிகள் கவுண்டர்களில் வாங்கக் கூடாதாம். அப்படி வாங்குவது ஆர்பிஐ விதிமுறைகள் படி தவறாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+