மும்பை: ஐடிபிஐ வங்கியை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளதால் தங்களது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் ஐடிபிஐ வங்கி உழியர்கள் உள்ளனர்
இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே ஐடிபிஐ வங்கி. ஆனால் வாராக்கடன் பிரசனையில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கியின் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதற்கான செயல் திட்டம் ஏற்கனவே கடந்த ஆண்டில் வகுக்கப் பட்டது.
தற்போது அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐடிபிஐ வங்கி பொதுத் துறை வங்கி என்ற நிலையிலிருந்து தனியார் வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது.
வங்கியின் வளர்ச்சி சார்ந்து மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியது.
தனியார் வங்கியாக மாற்றப்பட்ட போதிலும் இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் நிர்வாக முறையில் ஏதும் மாற்றம் இருக்காது. குறிப்பாக ஆட்குறைப்பு போன்ற ந்டவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை. அதேபோல் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றபடும்.
எனவே பணியாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும், இந்த மாற்றம் எழுத்துப் பூர்வமாக மட்டுமே இருக்குமென்றும், மேலும் நடைமுறையிலும் கூட பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிகிறது.