மும்பை: சர்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் 30.7 மில்லியன் டன்னாக குறையும் ஐ.ஆர்.சி.எ(ICRA) தரக் குறியீட்டு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த வருடம் சர்க்கரை உற்பத்தி 31.5 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் வறட்சி மற்றும் சூழ்நிலை காரணிகள் காரணமாக உற்பத்தியில் மாற்றம் இருந்தால் இந்த எதிர்பார்ப்பு இன்னும் குறையலாம்.
உத்திரபிரதேசம் மட்டும் அல்ல, கரும்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் அனைத்து நிலங்களிலும் வறட்சிநிலை நிலவி வருவதால் கரும்பு உற்பத்தி மிக குறையவே வாய்ப்புகள் அதிகம்.
தேவையைவிட உற்பத்தி அதிகம்
எனினும் சர்க்கரை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் பருவமழை குறைந்ததால் கரும்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்தாலும் சர்க்கரையின் விலையில் மாற்றம் இருக்காது என்றும் கூறியுள்ளது. ஏனெனில் தேவையை விட உற்பத்திஅதிகமாக உள்ளது.
சர்க்கரைஆலைகளுக்கு ஆதரவு
கடந்த2018 முதல் மத்திய- மாநில அரசுகள் தொடர்ச்சியாகசர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் சர்க்கரை ஆலைகளுக்கு சிலநிவாரணங்களையும் அளித்து வருகின்றன. மேலும் இந்த சர்க்கரைஆலைகளும் தேவைக்கு மேலே சர்க்கரையின் உற்பத்திஇருப்பதாகவும் அறிவித்துள்ளன.
சர்க்கரையின் தேவை
சர்க்கரையின் தேவைக்கு மேல் கரும்பு உற்பத்தி 4.5 - 5 மில்லியன்டன் வரை அதிகமாக இருக்கலாம். இந்த கரும்புகளை எத்தனால் உற்பத்திற்கு அனுப்பபடலாம் என்றும் சர்க்கரை ஆலைகள் தெரிவித்துள்ளன.மேலும் இதுகரும்பு உற்பத்தியையும் வரத்தையும் பொறுத்தே எவ்வளவு அனுப்படும் என்றும் தெரியும் என்கிறது ஆலைகள்.
விவசாயிகளுக்குமானியம்.
மத்தியஅரசு சர்க்கரைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரித்துள்ளது. இதோடு மாநில அரசும் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு சில மானியங்களையும், எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு மென் கடன்களையும் வழங்கியுள்ளன. மேலும் ஆலைகளுக்கு அருகிலோ, எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு, சமீப கால அவகாசத்திற்கு பின்னர் ஆலைக்கு தேவையான இடங்களை அளிப்பதாகவும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications