அமெரிக்கா: உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான சூழல் உலக அளவில் சிறப்பாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.
அதோடு இந்திய நாட்டில் இந்திய இளைஞர்கள் தான் ஸ்டார்ட் அப்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி கைத் தட்டல்களை அள்ளி இருக்கிறார் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி சீமா புஞ்சானி.
இந்திய இளைஞர்கள் மத்தியில் ஸ்டார்ட் அப் என்கிற கனவு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அவர்களின் வயதே சாட்சி. இந்தியாவில் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி தலைமை ஏற்று நடத்துபவர்களின் சராசரி வயது 31-ஆக மட்டுமே இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் சீமா புஞ்சானி.
இளைஞர்கள்
தற்போது இந்தியர்களின் சராசரி வயது 29 மட்டுமே. அதனால் தான் இந்தியாவை இளமையான தேசம் எனச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துபவர்களின் வயது 31-ஆக இருப்பது பெருமைக்குறியது எனவும் பேசி இருக்கிறார்.
ECOSOC
இந்த விவரங்களை ஐநா சபையில் நடந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (Economic and Social council - ECOSOC) இளைஞர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.
இளைஞர்கள் கை ஓங்கும்
அடுத்த ஒரு மாதத்துக்கு இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய இளைஞர்களின் கையில் இருக்கும் வாக்குகளையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வைத்துக் கொண்டு மத்திய அரசின் கொள்கைகளைக் கூட மாற்றியமைக்க முடியும் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஐநாவின் நிலையான வளர்ச்சி
ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில், இந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இளைஞர்கள் மாநாட்டில் "அனைவரும் சமமாக முன்னேறுவது, உயர்வது" என்கிற தலைப்பில் பல சர்வதேச தலைவர்கள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களையும் அழைத்து ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய விவாதித்திருக்கிறார்கள்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications