டெல்லி: ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்கள் மூலம் 500 மில்லியன் டாலர்களை நிதியாக திரட்ட திட்டமிட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 3475 கோடி ரூபாயாகும்.
இது குறித்து ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி நாட்டில் வாங்குதல் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் கடன் பெறுவதற்கு வெளி நாட்டு வர்த்தக கடன்கள் (ECB) அமைப்பின் மூலம் அனுமதிக்கப்படலாம் என்றும், அப்படி அனுமதிக்கப்பட்டால் இதன் மூலம் நிதியை திரட்ட முடியும் என்றும் கூறியுள்ளது.

மேலும் பத்திர ஒப்புதல் குழு சுமார் 3475 கோடி ரூபாய் அளவிலான கடன் பத்திரம் மூலம் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளதும். அதேசமயம் இந்த நிதி திரட்டல் குறித்த ஆவணங்களில் தே ையான கையெப்பங்களை இட்டிருப்பதாகவும் ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் பி.எஸ்.இயில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
இவ்வாறு வினியோகிப்படும் பத்திரங்களின் காலம் 3 1/2 ஆண்டுகள் என்றும், இதற்கான வருடாந்திர வட்டி 5.95% என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கடன் பத்திரங்கள் சிங்கப்பூர் செக்யூரிட்டீஸ் டிரேடிங்க் லிமிடெட்டில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிதி திரட்டல் மூலம் ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், மேலும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதோடு தொழில் முறைகளையும் மேம்படுத்தும் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது. இதனால் வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
பல்வேறு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் தத்தளித்து வருகின்றன. இந்த நிலையில் கொடுத்த கடனை பெற முடியாமல் இந்த நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளதா? அல்லது உண்மையிலேயே பணி விரிவாக்கத்திற்குகாக திரட்ட உள்ளதா என்றும் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் குழப்பத்தையில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா வேண்டாமா? வாங்கிய பங்குகளை வைத்திருக்கலாமா ? என பலர் குழப்பத்தில் உள்ளனர்.
இதையடுத்து இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று இந்திய பங்கு சந்தைககளில் 9 ரூபாய் அதிகரித்து 1230 ரூபாயாக (ஏப்ரல்,16,2019. 3.00pm) வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications