டெல்லி: பி,எஸ்.என்.எல் நிறுவனம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் முன்பை விட 25 மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. இதோடு பல ஆஃபர்களையும் வழங்கியுள்ளது கவனிக்க்தக்க விஷயமாகும்.
தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிலவி வரும் போட்டி காரணமாக ஒவ்வ்பொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன் காரனமாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மிக மோசமான பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜியோ , ஏர்லெட், வோடபோன் , ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிட்டு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அதிக ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து வருகிறது.
அனைத்து பிளாங்களும் மாற்றம்
தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 35 ரூபாய் , 53 ரூபாய் மற்றும் 395 ரூபாய் உள்ளிட்ட பிரிப்பெய்டு ரீசார்ஜ் திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. இதன் படி, 35 ரூபாய் ரீசார்ஜீக்கு 5GB டேட்டா 5 நாட்கள் வேலிடிட்டி என்றும், 53 ரூபாய் ரீசார்ஜீக்கு 8GB டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டி என்றும் அறிவித்துள்ளது.
பழைய பிரிபெய்டு திட்டம்
ஆனால் இந்த பிரிப்பெய்டு திட்டங்கள் இதற்கு முன்னர் 35 ரூபாய்க்கு 5 நாட்களுக்கு 200MB டேட்டா மட்டுமே கிடைத்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது இதன் மூலம் 25 மடங்கு கூடுதல் டேட்டா பெறலாம் என்றும், 53 ரூபாய்க்கு 21 நாட்களுக்கு 250MB டேட்டாவும் மட்டுமே கிடைத்து வந்தது.
மும்பை, டெல்லி தவிர அன்லிமிடெட் கால்
395 ரூபாய் ரீசார்ஜீக்கு தினமும் 2GB டேட்டாவும் ரோமிங் உட்பட (மும்பை, டெல்லி தவிர) அன்லிமிட்டட் வாய்ஸ் கால் வசதியும் 71 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கின்றன. இந்த ஆஃபர்கள் மக்களூக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோமிங்க் உள்ளிட்ட அனைத்து கால்களும்- ப்ரீ
இதுவே இதற்கு முன்பு இந்த 395 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB டேட்டாவுடன் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே வாய்ஸ் கால் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதாவது, 3,000 நிமிடங்கள் பிஎஸ்என்எல் வாய்ஸ் காலும், 1,800 நிமிடங்கள் பிற நெட்வொர்க் வாய்ஸ் காலும் இலவசமாக வழங்கப்பட்டன. இப்போது ரோமிங் உட்பட அன்லிமிட்டட் வாய்ஸ் கால் தரப்படுகிறது.