டெல்லி : பொதுத்துறையை வங்கியான அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அலாகாபாத் வங்கி செபிக்கு அளித்துள்ள அறிக்கையில், அலாகாபாத் வங்கியில் மத்திய அரசு அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 3000 கோடி ரூபாய் இருந்தது. இதையடுத்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடத்திய ஆலோசனையில் அடிப்படை மூலதனத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்தது.
இந்த நிலையில் அலாகாபாத் வங்கிக்கு அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 5000 கோடி ரூபாயை அளித்துள்ளது. இதையடுத்து வங்கியின் மூலதனம் ஏற்கனவே இருந்த 3000 கோடி ரூபாயுடன் மொத்தம் 8000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நிதி திரட்டி கொள்ளும் உச்ச வரம்பு அதிகரிக்கும்
மேலும் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் அதிகரிக்கப்பட்ட பின்னர், வங்கி நிதி திரட்டி கொள்ளும் உச்ச வரம்பும் 8000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வங்கிகளின் காலாண்டு முடிவுகள் குறித்து ஒரு அலசலை பார்க்கலாம்.
டிசம்பர் காலாண்டில் நஷ்டம்
இந்த நிலையில் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த 2018 டிசம்பருடன் முடிவடைந்த 3-வது காலாண்டில் இதன் நிகர லாபம் குறைந்து - 732.81 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதாவது நஷ்டத்தில் இருந்தது. இதுவே செப்படம்பர் 2018, அதாவது இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் - 1822.71 கோடி ரூபாயாகவும் குறைந்திருந்தது. இதுவே ஜீன் காலாண்டில் - 1944.37 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் அதிகபட்ச தொகையான -3509.63 கோடி ரூபாயாகவும் லாபம் நஷ்டமடைந்துள்ளது.
செயல்படாத சொத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரிப்பு
இந்த நிலையில் செயற்படாத சொத்துகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ல் மட்டும் மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பு 28,218.79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் இந்த சொத்தின் மதிப்பு 27,236. 19 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications