மும்பை: மகாராஷ்டிரா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் இல்லை என மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளதாம்.
மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மா நிலங்களில் மழையின்மை காரனமாக வறட்சி தலை விரித்தாடுகிறது. இந்த நிலையில் அவுரங்காபாத், லாதூர், அகோலம், அமாராவதி சோலாப்பூர், ஜல்கான் போபால் மற்றும் ஜபல்பூர் போன்ற எட்டு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் இந்த பகுதி மக்கள் அரசு வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் (பேங்க் ஆப் மகாராஷ்டிரா) கடன் உதவி பெற திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதேசமயம் மகாராஷ்டிரா வங்கி இந்த பகுதி மக்களுக்கு கடன் வழங்க கூடாது என்று முடிவெடுத்திருப்பதாகவும், இது குறித்து தலைமை நிர்வாகம், மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளூக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
ரூ.1300 கோடிக்கு கடன் விண்ணப்பம்
இந்த சுற்றறிக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள எட்டு பகுதிகளில் உள்ள இந்த வங்கியின் எந்த கிளையும் விவசாயிகளுக்கு கடன் அளிக்க கூடாது என்பது தானாம். அந்த சுற்றறிகையில் வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயக் கடனாக 1300 கோடி ரூபாய்க்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பகுதிகளில் வாராக்கடன் அதிகம்
ஏற்கனவே இந்த பகுதிகளில் வாராக்கடன் 18.36 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளன. இந்த நிலையில் ஒரு வங்கி 15 சதவிகிதத்திற்கும் மேல் வாராக்கடன் சென்றால், அந்த வங்கி மேற்கொண்டு எந்த கடனையும் அளிக்க கூடாது என்பது வங்கிகளின் சட்ட விதி. இந்த நிலையில் ஏற்கனவே 18 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள இந்த பகுதிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
போபால் இரண்டாவது இடம்
அதிலும் அவுரங்காபாத் பகுதிகளில் மட்டும் 25 சதவிகிதம் வாராக்கடன் உள்ளதாம். இதற்கு அடுத்தாற்போல் போபால் 21 சதவிகிதமும், சோலாப்பூர் 19 சதவிகித வாராக் கடன் களும், அகோலா 16. சதவிகித வாராக்கடனிலும் உள்ளதாக மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகின்றன.
முன்னுரிமை பெயரளவில் மட்டும்
இந்த நிலையில் வங்கிகள் விவசாய கடனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தாலும், இந்த கடன் மறுப்பு விவாசாயிகள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications