அகமதாபாத்: அமுல் பால் நிறுவனம் பால் விற்பனையை குஜராத் மாநிலத்திலத்திலும், பால் துணைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. இதோடு இந்த நிறுவனம் அயல் நாடுகளுக்கு, பல கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தும் வருகின்றது.
இதில் எருமைப்பால் விலையை 10 ரூபாயும், இதே மாட்டுப் பால் விலை 4.5 ரூபாயும் அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக பால் உற்பத்தி மிக குறைந்துள்ளது எனவும் அமுல் நிறுவனம் கூறியுள்ளதாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் குளிர்காலத்தில் 30 லட்சம் லிட்டர் பால் தினசரி கிடைக்கும். ஆனால் இது தற்போது 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
இதோடு எருமை பாலில் இருந்து எடுக்கப்படும் தூய வெண்ணெய் 640 ரூபாய்க்கும், இதுவே மாட்டு பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் 290 ரூபாயாகவும் விலை நிர்ணயித்துள்ளதாம். இதே 1200 அமுல் பால் சங்கங்கள் மூலம் 7 லட்சம் கால் நடை வளர்ப்பவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிலவி வரும் கோடைகால வெப்ப நிலையால் பால் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். கோடை வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைந்ததால், பால் உற்பத்தியாளர் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக இதுபோன்ற பல பிரச்சனைகளை தடுக்கவும், கொள்முதலை அதிகரிக்கவும் இந்த விலை அதிகரிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த நிறுவனம் முன்னர் அறிவித்தது போலவே தற்போது செயலில் இறங்கியுள்ளது. குறிப்பாக லாபம் கணக்கு வைக்கல இதற்கு காரணம் நாங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை. ஏனெனில் வால்யூம் அடிப்படையில் தொழிலை கவனித்தோமே தவிர லாபத்தை கணக்கில் கொள்ளவில்லை. இதனாலேயே வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் லாபம் குறைந்தது. எனினும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தான் இந்த விலை அதிகரிப்பும் நடந்துள்ளது.
அதோடு இந்த நிறுவனம் ஏற்கன்வே கூறியது போல, இந்தாண்டு 600 - 800 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்றும். அதன் உற்பத்தி திறன் மற்றும் ஆராய்ச்சியை உயர்த்தவும், மேலும் அதன் சந்தைப் பங்குகளை பராமரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என அறிவித்திருந்தது. அதன் முதல் அத்தியாயம் தான் இந்த விலையேற்றம் என்கிறார்கள் நிபுணர்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications