டெல்லி : ஐ.டி நிறுவனதங்களில் முன்னனி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்துள்ளது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம். அதோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த பவுண்டேஷனுக்கு தடையும் விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் என்னும் பெயரில் 1996ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனம் கல்வி, கிராம முன்னேற்றம், மருத்துவம், கலை, கலாச்சாரம், இதோடு ஆதரவற்றோருக்கு நலம் உள்ளிட்டோருக்கு உதவி வந்தது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவியாக சுதா மூர்த்தி பொறுப்பு வகித்தும் வருகிறார்.
சமீபத்திய அரசு உத்தரவின் படி, வெளி நாட்டு உதவி பெரும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் தங்களது கனக்குகளை முழுவதுமாக அரசிடம் அளித்து அனுமதி பெற வேண்டும் என்பதே அரசி உத்தரவு.
மொத்தம் 1755 நிறுவனங்கள்
ஆனால் இது போன்ற கணக்கு வழக்குகளை வழங்காத 1755 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு இந்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த லிஸ்டில் உள்ள நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனும் ஒன்று.
வெளி நாட்டிலிருன்து எந்த உதவியும் இல்லை
ஆனால் இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறுகையில், இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் தங்களுக்கு தற்போது வெளி நாட்டிலிருந்து எந்த உதவிகளும் வருவதில்லை. இதனால் கணக்குகள் அளிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளது.
ஏன் சொல்லவில்லை?
ஆனால் அன்னிய செலவாணி சட்டப்படி வெளி நாட்டு உதவிகள் பெறாத வருடங்களில், உதவிகள் எதுவும் வரவில்லை என குறிப்பிட்டு கணக்குகள் அளிக்க வேண்டும் என்பதை இன்ஃபோசிஸ் மறந்து விட்டது போலும்.
6 வருடங்களாக எந்த அறிக்கையும் இல்லை
இதே போன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 6 வருடங்களாக கணக்கு தாக்கல் அறிக்கையை அளிக்காததால் அந்த நிறுவனத்தின் பவுண்டேஷன் உரிமத்தை ரத்து செய்யவும், அதே சமயம் அந்த பவுண்டேஷன் இயங்கவும் தடை விதித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல
இந்த நிலையில் இந்த பவுண்டேஷன் வெப்சைடில் இது குறித்த தகவல் ஏதும் கிடைக்குமா என்று பார்க்கையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த பவுண்டேஷன் அடித்தட்டு மக்களுக்கு தனது சமூக சேவையை செய்வதற்காகவும், இதன் மூலம் தனது சமூகத்தில் இருக்கும் தனது பொறுப்புணர்வை நிறைவேற்றும் முயற்சியாகவும் தான் இந்த பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறதாம்
மேலும் ஆரம்பத்தில், இன்போசிஸ் அறக்கட்டளை கர்நாடகாவில் மட்டும் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் பிறகு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பீகார், தில்லி, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறதாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications