புபநேஷ்வர் : ஃபனி புயலால் ஒடிசாவில் சுமார் ரூ.12000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் 14 மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. இதில் சுமார் 64 பேர் உயிரிழந்தனராம். 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனராம். புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக ஒடிசாவில் மத்தியக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த குழுவிடம், புயல் சேதம் தொடர்பான முதல்கட்ட அறிக்கையை ஒடிசா அரசு வழங்கியுள்ளது. இதில், மாநிலத்துக்கு சுமார் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் அரசு சொத்துகள் மட்டும் ரூ. 5,175 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் நிவாரணம் உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கான செலவு ரூ.6,767.56 கோடி எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.
இது குறித்து ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் எஸ்.பி. சேதி கூறியதாவது, கொடுக்கப்பட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சேத மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளது. இது தற்காலிக மானது தான். இன்னும் விரிவான அறிக்கைக்கு பிறகே அது தெரியவரும். இந்த நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதி சிறப்பு பேரிடர் நிவாரண நிதி உதவி தொடர்பான விதிமுறைகளை தளர்த்தும்படி மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆக இது குறித்து முழுமையான அறிக்கை விரைவில் தயாராகும்.
இதில் குறிப்ப்பாக புரி மாவட்டத்தில் மட்டும் 75 மின் கோபுரங்கள் சாய்ந்துள்ளன. இதனை சீர்செய்ய அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது என அவர் கூறியுள்ளராம் சேதி.
அதொடு அறிக்கையில், 1,160 கோடி ரூபாயில் மின்வாரியத்தில் மிக அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும். பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் துறையின் இழப்பு 587 கோடி ரூபாய் எனவும் காட்டப்படுள்ளது. ஆனால் இந்த ஆரம்ப அறிக்கையில் காட்டப்பட்ட இழப்பு முற்றிலும் தற்காலிகமாகும் என் கிறார் சேதி.
இந்த மத்தியக் குழுவின் தலைவரான மத்திய உள்துறை கூடுதல் செயலர் விவேக் பரத்வாஜ் கூறுகையில், ''மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்கள் என பல பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications