டெல்லி : இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.6099 கோடியை நிகரலாபமாக பெற்றுள்ளதாம். இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 5218 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மொத்தம் 17% அதிகமாகும்
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 2018 - 2019ல் கடந்த நான்காவது காலாண்டில் 1,44,472 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் 1,36,716 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 17வது லோக் சபா தேர்தலின் போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதோடு கர்நாடாகா தேர்தலின் போது பல கட்சிகள் இந்த விலை உயர்வை கண்டித்து எதிர்கோஷமிட்டன. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆயில் கார்ப்பரேஷன் தொடர் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தின. இதனால் காலாண்டு லாபம் அதிகரித்திருந்தாலும் வருட லாபம் குறைந்தே காணப்படுகிறது.
வருட நிகரலாபம் 21% வீழ்ச்சி
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் இது குறித்து கூறுகையில் கடந்த 2018 - 2019 நிதியாண்டில் 6,05,924 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதே கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் 5,06,428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பு அதிக அளவு விலையேற்றம் மற்றும் விற்பனை பொருட்களின் மதிப்பு காரணமாகவே இருந்தது. எனினும் இந்த நிறுவனத்தின் வருட நிகர இலாபம் 21% வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. குறிப்பாக 16,894 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சுத்திகரிப்பு செலவு கம்மி
இதுவே மொத்த சுத்திகரிப்பு செலவு கச்சா எண்ணெய் விலை மற்றும் இறுதிப் பொருட்களின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட வருவாய்க்கான வித்தியாசம்-2018 -2019ல் பீப்பாய் ஒன்றுக்கு 5.41 டாலராக குறைந்துள்ளது. இது 2017 - 2018 ல் பீப்பாய்க்கு 8.49 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் இருப்பின் மூலம் லாபம்
இதுவே மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், கச்சா எண்ணெய் இருப்பின் மூலம் பெறப்பட்ட லாபம் ரூ 2,655 கோடி எனவும் அறிவித்துள்ளது.
ஒப்பந்தத்தால் சற்று ஆறுதல்
இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்ட நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமே என்ற நிலையில் அனைவரையும் சற்று ஆறுதல் அடையும் அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சவுதி அராம்கோ இறக்குமதி
அதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும், மாதத்திற்கு 2,50,000 டன் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யப் போவதாகவும், இந்த அதிகரிப்பு ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
எங்ககிட்ட ஒப்பந்தம் இருக்கு அதனால கவலையில்ல
இது குறித்து கூறிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே.சர்மா கூறுகையில், சவூதி அரேபியாவிலிருந்து கூடுதல் அளிப்புகளாக 5.6mt ஆண்டு கால ஒப்பந்தம் உள்ளது. இதனால் ஈரானிய எண்ணெய் இறக்குமதி தடைகளின் மூலம் எந்த பற்றாக்குறையும் இருக்காது. இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் விநியோக பற்றாக்குறையையும் தடுக்க முடியும். இதனால் பற்றாக்குறை என்ற கவலை இல்லை எனவும் கூறுகிறார் சர்மா.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications