மத்திய பட்ஜெட் 2019-20 ஜூலை 10ல் தாக்கலாக வாய்ப்பு - மோடி சென்டிமெண்ட்

மோடி தலைமையிலான 17 நாடாளுமன்றத்தின் முதல் முழு பட்ஜெட் ஜூலை 10ஆம் தேதி தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 10ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில் புதிய நிதியமைச்சர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற ஒப்புதலுடன் புதிய அரசு அமையும் வரை தேவையான நிதிச்செலவீனங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டது.

பெரும்பான்மை பெற்ற பாஜக

பெரும்பான்மை பெற்ற பாஜக

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களை வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

நிதியமைச்சர் யார்

நிதியமைச்சர் யார்

கடந்த 5ஆண்டு காலமாக நிதியமைச்சராக அருண்ஜெட்லி பதவி வகித்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் பியூஷ் கோயல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு நாளை பொறுப்பேற்க உள்ளது பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். அதன்பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் முடிவு செய்யப்படும். நிதியமைச்சராக ஜெயந்த் சின்கா பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முழு பட்ஜெட் தாக்கல்

முழு பட்ஜெட் தாக்கல்

புதிய அரசு பதவியேற்ற உடன் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை செயலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டங்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான பிரதமர் விவசாயி பாதுகாப்பு நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்காக 75ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய அரசிலும் விவசாயிகள், ஏழைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பட்ஜெட்டிலும் மாத சம்பளதாரர்கள் மனதை குளிர்விக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மோடி சென்டிமெண்ட்

மோடி சென்டிமெண்ட்

கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியை பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இம்முறையும் அதே சென்ட்மெண்ட் பாணியில் ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+