மோடி தலைமையிலான 17 நாடாளுமன்றத்தின் முதல் முழு பட்ஜெட் ஜூலை 10ஆம் தேதி தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 10ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில் புதிய நிதியமைச்சர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற ஒப்புதலுடன் புதிய அரசு அமையும் வரை தேவையான நிதிச்செலவீனங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டது.
பெரும்பான்மை பெற்ற பாஜக
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களை வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
நிதியமைச்சர் யார்
கடந்த 5ஆண்டு காலமாக நிதியமைச்சராக அருண்ஜெட்லி பதவி வகித்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் பியூஷ் கோயல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு நாளை பொறுப்பேற்க உள்ளது பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். அதன்பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் முடிவு செய்யப்படும். நிதியமைச்சராக ஜெயந்த் சின்கா பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முழு பட்ஜெட் தாக்கல்
புதிய அரசு பதவியேற்ற உடன் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை செயலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டங்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான பிரதமர் விவசாயி பாதுகாப்பு நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்காக 75ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய அரசிலும் விவசாயிகள், ஏழைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பட்ஜெட்டிலும் மாத சம்பளதாரர்கள் மனதை குளிர்விக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மோடி சென்டிமெண்ட்
கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியை பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இம்முறையும் அதே சென்ட்மெண்ட் பாணியில் ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications