டெல்லி : இந்தியாவில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அத்தகைய வளர்ச்சிக்கு மேலும் ஊன்றுகோலாக புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்பு, புதியதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்ற ரவி சங்கர் பிரசாத் 5ஜி பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாராம்.
ஆமாப்பு அதில் இன்னும் நூறு நாட்களில் 5ஜி சேவை குறித்த சோதனையை தொடங்கவுள்ளதாம். கடந்த திங்கட் கிழமை பொறுப்பேற்ற பின்னர் ரவி சங்கர் பிரசாத் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளர். இதனால் தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி செல்லலாம் என்றும் கருதப்படுகிறது.

அதோடு ஸ்பெக்டரம் குறித்த ஏலம் நடப்பு காலாண்டில் நடக்கலாம் என்றும் கூறியுள்ளராம். கடைசியாக ஸ்பெக்டரம் ஏலம் கடந்த 2016ல் ஏலம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ரவி சங்கர் பிரசாத் தொலைத் தொடர்பு துறை மட்டும் அல்ல தகவல் தொழில் நுட்ப துறையும் மத்திய அமைச்சராக திகழ்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு முன்னுரிமை அடிப்படையில் 5 லட்சம் வைபை ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் ஹாட் ஸ்பாட்கள் தேவைப்படும் இடங்களுக்கு சென்றடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதோடு ஐ.டி துறையையும் சேர்த்து தொலைத் தொடர்பு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளாராம்.
அதோடு விரைவில் தொலைத்தொடர்பு துறை விரைவில் பிராண்ட்பேன்ட் துறை broadband readiness index குறியீட்டை மாநிலங்களுக்கு தரவரிசை படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார் ரவி சங்கர் பிரசாத்.
மோடி அரசில் புதிதாக பதிவியேற்றுள்ள ரவி சங்கர் பிரசாத்துக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் மட்டும் அல்ல. 5G சோதனைக்கு ஒப்பந்தம் போட்டுள்ள Huawei யில் நடக்கும் பிரச்சனை குறித்தும் தீவிரமாக அலச வேண்டிய கடைமையும் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் புத்தியிர் பெறுவதும் அவரது கையில் தான் உள்ளது என்றும், இது ரவி சங்கரின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications