பெங்களுரு : முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது சராசரி ஊதிய உயர்வு கடந்த ஜீன் 1 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
பெங்களுரை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த மென்பொருள் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு அதிக பட்ச தொகையினை ஊதிய உயர்வாக அறிவித்துள்ளது.

சராசரியாக 6 - 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்தாலும், இங்கு வேலை செய்யும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் இல்லங்க.. இந்த நிறுவனம் சில ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது, குறிப்பாக டிஜிட்டல் துறையில் உள்ளவர்களுக்கு இந்தசிறப்பு சலுகை அதிகரிச்சிருக்காம். ஆமாங்க.. machine learning, artificial intelligence உள்ளவங்களூகெல்லாம் நல்ல லக்கு தான்.
சில புதிய ஊழியர்களுக்கும், அதாவது இந்த நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் இருக்கும், ஊழியர்களுக்கு கூட இந்த சம்பள உயர்வு 6 -8 சதவிகிதம் கொடுத்திருக்காங்களாம். அது மட்டும் இல்லங்க. சிலருக்கு 6 சதவிகிதத்துக்கும் மேல் ஊதிய உயர்வும் இருக்காம்.
எப்படியோ? சராசரியாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒற்றை டிஜிட்டலில் அதிக சம்பள உயர்வு கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
இதோடு ஆரம்ப கட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு, இந்த ஊதிய உயர்வு ஒருவித ஊக்கத்தை கொடுக்கும். அதோடு தற்போது அதிகளவு ஊதிய உயர்வு பெற்ற ஒவ்வொரு ஊழியர்களுக்கு இதற்கு முன்பு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதோடு எதிர்கால நோக்கம் கருதி சிறந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதனால் ஊழியர்களின் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஊக்கத்தோடு பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக மிக வெற்றிகரமாக வழிநடத்தி வரும் அசிம் பிரேம்ஜி. தற்போது தனது நிறுவனத்தை பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில் ஜீலை மாத இறுதியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஊழியர்களுக்கு தற்போது பல சலுகைகளையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications