நொய்டா, உத்திரப் பிரதேசம்: Paytm இந்தியாவின் முன்னணி இ-வேலட் நிறுவனங்களில் ஒன்று. யாரோ ஒரு சிலர், Paytm-ல் பணப் பரிவர்த்தனைகளுக்கு 4 - 5 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த கட்டணம் மூலம் Paytm நிறுவனம் செய்யும் செலவுகளின் அளவு குறைந்து லாபத்தை அதிகரிக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த கட்டண விவகாரம் காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.
இந்த பிரச்னையை கண்டு கொண்ட Paytm, தன் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "இதுவரை Paytm டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், யூபிஐ மற்றும் வேலட்களில் இருந்து செய்யும் எந்த பணப் பரிமாற்றத்துக்கும் கட்டணம் வசூலிக்கவில்லை. இனி வருங்காலத்திலும் வசூலிக்கப் போவதில்லை" என திட்டவட்டமாகச் சொல்லி தங்கள் மீது எழுந்த சந்தேகத்தை துடைத்தெறிந்திருக்கிறார்கள் Paytm நிறுவனத்தினர்.

கல்வி நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் ஒரு சிலர் மக்களிடம் செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். அது போன்ற சமயங்களில் க்ரெடிட் கார்டில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட்களையோ அல்லது யூபிஐ முறையிலோ பணப் பரிவர்த்தனைகளை மேற் கொண்டு கட்டணங்களில் இருந்து தப்பிக்கலாம் என வழியும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய இ வேலட் என்றால் அது Paytm தான் என அடித்துச் சொல்லலாம். ஒரு மாதத்தில் சுமார் 400 மில்லியன் (40 கோடி) பணப் பரிவர்த்தனைகளை Paytm தனியாக கையாள்கிறதாம். Paytm-க்கு அடுத்து இந்தியாவில் இரண்டாவது பெரிய இ வேலட்டாக இருக்கும் நிறுவனமே சுமார் 8 கோடி பணப் பரிவர்த்தனைகளைத் தான் கையாள்கிறதாம். ஆக இந்தியாவின் நம்பர் ஒன் இ வேலட்டுக்கும், நம்பர் டூ இ வேலட்டுக்குமான இடைவெளி சுமார் 5 மடங்கு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இந்தியாவில் ஐஆர்சிடிசி தொடங்கி உபர், சொமேட்டோ, ஓயோ, க்ரோஃபர்ஸ், பிக் பாஸ்கட், பி வி ஆர் சினிமா, க்ளப் ஃபேக்டரி, டோமினோஸ், ஜியோ என பல ஆன்லைன் வியாபாரிகள் Paytm வழியாக தங்களுக்கான பேமெண்டை வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications