டெல்லி: உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான லாபத்தை விவசாயிகள் பெறும் வகையில், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்களுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைத்தோ அல்லது தள்ளுபடி செய்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உணவுக் கிடங்கு அமைப்புகளின் சார்பில் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக உள்ள காலங்களில் அவற்றை சேமித்து வைத்து, தேவைப்படும் காலங்களில் அவற்றை விநியோகிப்பதால் தான் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புவதாக கிடங்க அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்தியாவின் முதுகெலும்பே விவசாய உற்பத்திதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்னும் ஜிடிபி (GDP) வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதும் விவசாய உற்பத்தியினால் தான். இதை மறந்து, விவசாயிகளின் நலனைக் காப்பதற்கு பதிலாக, விவசாயிகளுக்கு விருப்பம் இல்லாவிட்டால், வேறு கூலித் தொழிலுக்கோ அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தோ பிழைத்து கொள்ளுங்கள் என்று விவசாயிகளை உதாசீனப் படுத்தியதால் தான் அவர்களும் கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உதாசீனப் படுத்தினர்.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் முதல் நான்கு ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எந்தவிதமான உருப்படியான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
ஆட்சியின் இறுதிக்காலத்தில், விவசாயிகளின் குறைந்த பட்ச வருவாயை உறுதி செய்யும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் பிஎம்-கிஷான் (PM-KISSAN) திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த கையோடு, விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்தையும், வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியேற்ற கையோடு, வரி ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் துறையினர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பட்ஜெட் ஆலோசனைகளை கேட்டறிந்தார். அவர்களும் தங்களின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் அளித்திருந்தனர். தற்போது பட்ஜெட் தயாரிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், விவசாய உற்பத்தி மற்றும் பெருக்கத்திற்கு பக்க பலமாக உள்ள உணவு கிடங்கு அமைப்பினரும், தங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை அளிக்கவேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட போது, பெரும்பாலான பெரும்பாலான பொருட்கள் மற்றம் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகித வரி வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இதனால், பெரும்பாலான சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அவற்றுள் விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளும் அடங்கும்.
சேமிப்புக் கிடங்குகளுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், இவற்றை நடத்தும் அமைப்புகளுக்கான வருமானமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரியை விவசாய விளைபொருட்களின் மீது திணிக்கப்படுவதால் விளைபொருட்களின் விலையும் அதிகரித்து விலை வாசியும் அதிகரிக்கிறது. எனவே உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித வரியை நீக்கவேண்டும் என்றும் உணவு கிடங்கு அமைப்பினர் நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிவிட்டால், விவசாய விளைபொருட்களின் விலை குறைவதோடு விவசாயிகளுக்கும் அதிக லாபம் கிடைக்கும். எனவே கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கவேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடங்கு அமைப்பினரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா, இது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறுமா இல்லையா என்பது வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் தெரிந்துவிடும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications