லக்னோ : உத்திரபிரதேச அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவது, அந்த மாநில அரசுக்கு தொடர்ந்து பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டில் சிக்கித் தவித்து வரும் அந்த மாநிலத்தின் 600க்கும் மேற்பட்டோர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆமாங்க.. சட்ட விரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கித் தவிக்கும் ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதில் மொத்த 600 பேரில் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ளோருக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாகவும், அதோடு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த கட்டாய பணி பெறுபவர்களிலும், லஞ்ச ஊழலில் ஈடுபட்டோரிலும் சில கலெக்டர்களும், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் கூட இடம் பெற்றிருக்கிறார்களாம்.
அது மட்டும் இல்லாமல் மாநில அரசுகள் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரச்சையும் நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் திறம்பட செயல்படாத மற்றும் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய 50 வயதுக்கும் மேற்பட்ட 50 போலிசாருக்கும் கட்டாய ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வெளியான அறிக்கையில் எந்தவொரு மாநில அரசும் எடுக்காத கடினமான முடிவை உத்திர பிரதேச மாநில அரசு எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
இது குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, இவ்வாறு மேற்கொள்ள பட்ட நடவடிக்கையானது, மூலம், கடந்த 2017 - 2018ம் ஆண்டில் இந்த அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டவர்களாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இவ்வாறு பிரச்சனை மற்றும் ஊழலில் மாட்டிக் கொண்டவர்களில் 50 வயதுக்கும் மேற்கொண்டவர்கள் தான் அதிகம் என்றும் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications