ஹபூர் : உத்திரபிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள, சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா.
இந்த தம்பதியின் வீட்டுக்கு சமீபத்தில் மின்சார கட்டணத்துக்கான பில் வந்துள்ளது. அதைப்பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில்லில் அவரது வீட்டின் மின் கட்டணம் ரூ.128,45,95,444 (128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய்) மின் கட்டணம் என காட்டியுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அவரின் வீட்டில் மின் கட்டணம் செலுத்த வில்லை என்றும், அவரது வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 கிலோ வாட் மின் இணைப்பு கொண்ட வீட்டுக்கு இவ்வளவு தொகையா? எனது வேண்டுகோளை ஒருவருமே கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை என்னிடம் தந்துள்ளது என்றும் புலம்பியுள்ளார்.
இதுவே அவரின் மனைவி கைரு நிஷா ஐயா சாமி, நாங்க பரம் ஏழைகள் இவ்வளவு தொகை மின்சார கட்டணமாக கட்ட சொன்னால், நாங்கள் என்ன செய்வோம் என்றும் புலம்பியுள்ளார்.
அதுமட்டும் அல்ல, ஐயா சாமி நாங்கள் மின் விசிறி மற்றும் லைட் மட்டும் தான் பயன்படுத்துகிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும். அதுவும் ஆயிரம் இரண்டாயிரம் இருந்தால் கூட பரவாயில்லை. சராசரியாக ஒரு மாதத்திற்கு, எங்களுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை மின் கட்டணம் மட்டும் தான் செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மின்சார கட்டணத்துக்கான பில் குறித்து மின்வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது என்றும், இந்த தவறு விரைவில் அது சரிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறதாம்.
அதோடு இது குறித்து உதவி மின்பொறியாளர் ராம் சரண் என்பவர் கூறுகையில், இது ஒரு பெரிய விஷயமே அல்ல, இது ஒரு தொழில்நுட்ப கோளாராக இருக்கலாம். விரைவில் இது சரி செய்யப்படும், இதுபோன்ற தொழில் நுட்ப பிழைகள் அசாதாரமாணவை அல்ல. கடந்த ஜனவரியில் உத்திர பிரதேசத்தில் உள்ள கண்ணாஜியில் ஒருவருக்கு, மின்சார கட்டணம் 23 கோடி ரூபாய் காட்டியது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளாராம்.
இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் முதியவர் ஒருவருக்கு 128 கோடி ரூபாய் மின்சார கட்டண பில் வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications