மும்பை : சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR நிறுவனம், Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரான சித்தார்த்தா, கடந்த திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போனது மிக வருத்தமடைய செய்வதாக, கடந்த செவ்வாய்கிழமையன்று அறிக்கையில் கூறியுள்ளது.
அதோடு அந்த நிறுவனம் இது குறித்து கூறுகையில், சித்தார்த்தா நிறுவன வாரியத்திற்கும் அவர் நிறுவிய Cafe Coffee Day சங்கிலியின் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், சித்தார்த் ஜூலை 27ம் தேதியன்று, ஒரு தனியார் private equity partners நிறுவனத்திடமிருந்து பங்குகளை திரும்ப வாங்குமாறும் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளாராம்.

அதோடு பிரபலமான இந்த காஃபி நிறுவனத்தில் 9 வருடங்களுக்கு முன்பே, தாங்கள் முதலீடு செய்ததாகவும், கடந்த ஆண்டு தான் இதிலிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளது.
மேலும் முன்னர் 10.3 சதவிகித பங்கினை வைத்திருந்ததாகவும், தற்போது 6 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்த நேரத்தில் எங்களது வருத்தங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் விஜி சித்தார்த்தாவை நம்புகிறோம். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம் என்றும் கே.கே.ஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தனியார் ஈக்விட்டி ஃபண்டுகளில், ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை ஒரு குறுகிய முதலீட்டு எல்லைகள் உள்ளன. அதில் அவை முதலீடு செய்யப்பட்ட நிறுவனம் வளர உதவுகின்றன என்றும் கே.கே.ஆர் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனான 57 வயதான சித்தார்த்தா கடனளித்தவர்கள் மற்றும் வருமான வரித் துறையின் அழுத்தத்தையும் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரின் அந்த வெளிப்படையான தற்கொலை குறிப்பில் இயக்குனர் மட்ட வருமான வரி அதிகாரியின் பெயரையும் கூட வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹெச்.டி.எஃப்.சி சித்தார்த்தாவுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திற்கும் எந்த வெளிப்பாடும் இல்லை என்றும் மறுத்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி பெங்களூரில் உள்ள குளோபல் வில்லேஜ் டெக் பார்க் என்ற திட்டத்திற்காக கடன் வழங்கியது என்றும், முழு கடனும் 2019 ஜனவரியில் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்றும், இன்றைய தேதியின் படி காபி டே எண்டர்பிரைசஸ் குழுவிற்கு எந்த வெளிப்பாடும் இல்லை என்று ஹெச்.டி.எஃப்.சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளாராம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications